Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு புழலில் அடைபட்ட மனைவி.. திருவள்ளூர் வீட்டில் டக்னு நுழைந்த போலீஸ்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: பள்ளி மாணவரை திருமணமான இளம்பெண் ஒருவர் கடத்தி சென்றது, திருவள்ளூரில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண் எப்படி சிக்கினார்? பெரியபாளையத்தில் என்ன நடந்தது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வினோதினிக்கு 24 வயதாகிறது.. இவர், மாணவனை ஆசை வார்த்தை கூறி காதலித்தும் வந்துள்ளார்.. பிறகு கடந்த டிசம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார்.

tiruvallur periyapalayam

பெரியபாளையம்: இதனிடையே, சிறுவனை காணாத பெற்றோர், பெரியபாளையம் போலீஸில் புகார் அளிக்கவும், போலீசாரும் காணாமல் போன பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.. அப்போதுதான், சிறுவனை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்றது தெரியவந்தது.. இறுதியில் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், இளம்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

+1 மாணவனுக்கு 17 வயதாகிறது.. அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இந்த மாணவர்.. வினோதினிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. 28 வயதாகிறது.. இருவருடைய வீடும் அருகிலேயே இருப்பதால், மாணவரும், வினோதினியும் நல்ல முறையிலேயே பேசி வந்துள்ளனர்.. ஆரம்பத்தில் வினோதினியை மாணவர், அக்கா..அக்கா.. என்றுதான் கூப்பிடுவாராம்.

வினோதினி: ஆனால், வினோதினிக்குதான், நாளடைவில் மாணவர் மீதுவிபரீத ஆசை வந்துள்ளது.. கணவர், 2 குழந்தைகளையும் மறந்து மாணவரை தன்னுடைய காதல் ஆசை வார்த்தைகளில் வீழ்த்த துவங்கியிருக்கிறார்.. நாளுக்கு நாள் மாணவருடனான நெருக்கமும் அதிகரித்தது... இவர்கள் 2 பேருக்குமே அதிக வயது வித்தியாசம் என்பதால், குடும்பத்தினருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதுதான் வினோதினிக்கு சாதகமாக இருந்து வந்துள்ளது..

வினோதினியும் மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளனர்.. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவர் வீட்டுக்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், பெற்றோர் பெரியபாளையம் போலீஸில் புகார் தந்துள்ளார்கள்.. இதுகுறித்த அந்த பகுதியிலுள்ள மக்களிடம் விசாரணையில் இறங்கியபோதுதான், மாணவனிடம் நெருங்கி பேசிய வினோதினியும் மாயமானது தெரியவந்தது.

போக்சோ பாய்ந்தது: அப்போதுதான வினோதினி மீது சந்தேகம் திரும்பியது.. பிறகு போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, இருவரும் கல்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்து மாணவரை மீட்டு, வினோதினியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் அட்டூழியங்கள் பெருகி கொண்டே வருகின்றன.. அதேபோல, ஆண் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகி கொண்டே போகின்றன.. சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்புக்காகவே போக்சோ சட்டங்கள் அமலில் இருந்தபோதும், இந்த குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. பெண்களும் போக்சோவில் கைதாகி வருவது தமிழக மக்களுக்கு கவலையையும், கலக்கத்தையும் தந்து வருகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+