முகமுடி அணிந்து பின்னாடியே வந்த 10 பேர்.. நசீன்கானை ஓட ஓட விரட்டி.. வந்தவாசியில் நடந்த பயங்கரம்!
திருவண்ணாமலை: ஆட்டோ சவாரி முடிந்து தனது வீட்டிற்கு வந்த நசீன்கானை முன்விரோதம் காரணமாக முகமுடி அணிந்து வந்த 10 பேர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் நசீர் கான். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மஸ்தான் என்பவருடன் இவருக்கு மோதல் இருந்து வந்திருக்கிறது.
இருவருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக, கடந்த 3 மாதத்திற்கு முன் நசீர் கான், மஸ்தானைகொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளார். இதன்படியே கொலை முயற்சியில் நசீன் கான் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதில் மஸ்தான் தப்பிவிட்டார். இதுதொடர்பான வழக்கு அங்குள்ள காவல் நிலையத்தில் உள்ளது.

விரட்டியது
இந்தநிலையில், நேற்றிரவு நசீர் கான் ஆட்டோ சவாரி முடிந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்தபடி, முகமூடி அணிந்து வந்த 10க்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி தாக்கியது.

தப்பி ஓடினார்
பயந்து போன நசீன் கான் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். ஆனாலும் விடாத 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில் நிலைத்தடுமாறி நசீர் கான் கீழே சரிந்ததும், அந்த கும்பல் நசீரின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

போலீசார் விசாரணை
ரத்த வெள்ளத்தில் நசீர் இறந்து கிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் ஆகியோரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மஸ்தானுக்கு தொடர்பா
போலீசார் நசீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நசீர்கானை கொலை செய்தது யார் என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மஸ்தான் மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications