டெண்டர் விவகாரம்... அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக நிர்வாகிகள்
திருவண்ணாமலை: இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு ஒப்பந்தப் பணிகள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறி அவர்கள் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வெளியேறிவிட்டார்.

ஆலோசனைக் கூட்டம்
உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள், டெண்டர் விவகாரம் குறித்து பேசத் தொடங்கினர். தேர்தல் பணிகளுக்கு மட்டும் நாங்கள் வேண்டும், டெண்டர் போட நாங்கள் வேண்டாமோ? என குரல் எழுப்பினர்.

அமைச்சர் சமாதானம்
ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென்று நிர்வாகிகள் இப்படி வெகுண்டெழுவார்கள் என நினைத்துப் பார்க்காத அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்துப் பார்த்தார். ஆனால் நிலைமை கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை என்றவுடன் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

டெண்டர் விவகாரம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை நகரில் கால்வாய் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்ட நிலையில், அதனை நிர்வாகிகள் அனைவருக்கும் பிரித்துக்கொடுக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அமைச்சர் வழங்கியதாக புகார் கூறப்படுகிறது.

அமைச்சரிடம் கேள்வி
மேலும், ரூ.10 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை ஏன் நீங்கள் பிரித்துக்கொடுக்கவில்லை என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை நோக்கி நிர்வாகிகள் கேள்விகள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தி.மலை மாவட்ட அதிமுக நிர்வாகிகளை முழு மனதுடன் ஈடுபடுவது கேள்விகுறியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications