Parvathamalai: கரடுமுரடான கடப்பாரை பாதை! பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்! மாவட்ட நிர்வாகம் அதிரடி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பர்வதமலை ஏற புதிய விதிமுறைகளை அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக பயணிப்போமாக!
பக்தர்களுக்கான விதிமுறைகள்: காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

18 வயது முதல் 60 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு மலையேற அனுமதி வழங்கப்படும். இதர மாவட்டத்தினர் 800 பேர் இணைய வழியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பர்வதமலையில் சிவன் கோயில் உள்ளது. இங்கு பலர் ஆன்மீக பயணமாக சென்று வருகிறார்கள். அண்மைக்காலமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விபத்துகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இதனால் வனத்துறை இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.இரவு நேரம் அல்லது மாலை நேரத்தில் மலையேறுவது ஆபத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் பர்வதமலை கடல் மட்டத்தில் இருந்து 4560 அடி உயரம் கொண்டது. இங்கு மல்லிகார்ஜுன பிரம்மராம்பிகை அம்மாள் உள்ளிட்ட கோயில்கள் இருக்கின்றன. இந்த கோயிலை 3ஆம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாக சொல்லப்படுகிறது. இங்கு மலையேற ஒருவருக்கு ரூ 10 வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. அதன்படி பார்த்தால் பர்வதமலைக்கு அடிக்கடி செல்ல முடியாது. பர்வதமலைக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பயணிகளின் உடைமைகள் வனத்துறையினரின் முழு பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள். பர்வதமலைக்கு செல்ல கெங்கலமகாதேவி, செம்மடந்தாங்கல், நம்மந்தங்குட்டை, கடலாடி, பட்டியந்தல், தென் மகாதேவ மங்கலம், திடீர் நகர், மேலாக்கொடி, பாலூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு கட்டணமில்லா அனுமதிக்கப்படுவர்.
பர்வதமலையில் கடப்பாரை படிக்கட்டு என்ற ஒரு கரடுமுரடான வழி இருப்பதால் அங்கு அந்த கடப்பாரைகள் பிடித்துக் கொண்டு ஏறுவது அபாயகரமானதாகும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
அதிலும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மலையேறி சிவனிற்கு அபிஷேகம் நடத்தலாம். இந்த கோயிலுக்கு வர படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான ஏணிப்படி, ஆகாயப்படி ஆகிய கடுமையான பாதைகளை கடந்துதான் செல்ல வேண்டும். இதில் ஆபத்துகள் நிறைய இருப்பதால்தான் வனத்துறையினர் விதிமுறைகளை வகுத்துள்ளனர். எனவே பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட விதிகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications