"நமோ நமோ" என மோடி புராணம் பாடும் பிரேமலதா.. குஷியில் பாஜக "பக்தர்கள்"
திருவண்ணாமலை: பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் பிரசார கூட்டங்களில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருவதன் மூலம் பாஜக தலைவர்கள் மனதை குளிர்வித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு வடசென்னை, விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 4 தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா ஈடுபட்டுள்ளார்.
தன் கட்சி வேட்பாளர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.
இது தேவையா.. ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம்
முன்னிலை
ஒவ்வொரு பிரசாரத்திலும் முதல்வர் பழனிச்சாமியை விட பிரதமர் மோடியையே முன்னிலைப்படுத்தி வருகிறார். அவர் எல்லா பிரசாரங்களிலும் பொதுவாக பேசும் சில விஷயங்களை பார்ப்போம். அவர் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நாடுகள் வியப்பு
திமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யாரென்றே தெரியவில்லை. நாட்டை பாதுகாக்கும் வலிமையான பிரதமராகவும் தைரியமான பிரதமராகவும் மோடி உள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த போது தன் நிர்வாக திறனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது திறமையை பார்த்து உலக நாடுகளே வியப்பில் ஆழ்ந்தன.
பாதுகாக்க முடியும்
மோடிக்கும் ராகுலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் மட்டுமே நாட்டு மக்களை பாதுகாக்க முடியும்.
புல்வாமா தாக்குதல்
சில நேரங்களில் புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என உளறி கொட்டினாலும் முதல்வர் எடப்பாடியை விட பிரேமலதா மோடி புராணம் பாடி வருவதை தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை, சிபி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.