திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் 3 கோடி சம்பாதித்த பெண் வங்கி மேலாளர்.. மிரண்ட அதிகாரிகள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை காந்திநகரில் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளை செயல்படுகிறது. இங்கு மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ், திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டுவைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரும் கடந்த ஆண்டு கவரிங் நகைகளை வங்கியில் வைத்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக வங்கியில் 20 பேர் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.3 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ளனர். இதில் வங்கி பெண் மேலாளர் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
தங்க நகைகளின் மதிப்பு ஒரு சவரன் 75000 என்கிற அளவிற்கு போய்விட்டது. தங்க நகைகளின் மதிப்பு அதிகமாக இருப்பதால் பலரும் நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்குகிறார்கள். ஆனால் அப்படி நகைகளை அடகு வைக்க வரும் சிலர் மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள். வங்கி ஊழியர்கள் சிலரும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். இதே போன்ற சம்பவங்கள் மன்னார்குடி, தேனி, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இப்போது நடந்துள்ளதாக புகார்கள் எழுந்து கைது நடவடிக்கையும் எடுககப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் திருவண்ணாமலையும் இணைந்துள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கி
திருவண்ணாமலை மாநகரம் காந்திநகரில் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளை ஒன்று செயல்படுகிறது. இங்கு மங்கலம் அடுத்த கருமாரபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரும், திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும் கடந்த ஆண்டு கவரிங் நகைகளை வங்கியில் வைத்து பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தது.
கவரிங் நகை வைத்து மோசடி
இதனைத்தொடர்ந்து ராமதாஸ், ஏழுமலை ஆகிய இருவரிடமும் வங்கியில் உள்ள மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் ரகசியமாக பேசி இவர்கள் மூலம் 20-க்கும் மேற்பட்டோர் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் ரூ.3 கோடி ரூபாய் அளவில் பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
வங்கி மேலாளர் உடந்தை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியின் தணிக்கை பிரிவு அதிகாரிகள் காந்திநகர் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் நகைகளை ஆய்வு செய்துள்ளார்கள். அப்போது ராமதாஸ் மற்றும் ஏழுமலை உள்பட 22 பேர் பெயரில் கவரிங் நகைகளை வைத்து ரூ.3 கோடி அளவில் மோசடி செய்துள்ளதும், இதற்கு உடந்தையாக வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன் மற்றும் வங்கி பணியாளர்கள் உடந்தையாக இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள், திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு இந்த மோசடி தொடர்பாக புகார் அளித்தனர். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
வங்கி மேலாளர் நகை மதிப்பீட்டாளர் கைது
இதில் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டதை விசாரணைக்கு பின்னர் போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன், ஏஜெண்டாக செயல்பட்ட ஏழுமலை ஆகிய 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications