Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலையில் கோவில் கொடிமரம் அருகே வந்த விஐபிக்கள்.. ஆந்திர குடும்பத்தினருக்கு என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: வழக்கத்தைவிட கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளி மாநில பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆந்திர யூடியூபர்களின் தொடர்ச்சியான வீடியோக்களால் திருப்பதிக்கு நிகராக திருவண்ணாமலைக்கு தெலுங்கு மக்கள் படைஎடுப்பது அதிகரித்துள்ளது. அப்படி வார இறுதியில் வந்த ஆந்திர மாநில பக்தர்கள் விஐபி தரிசன வழியில் செல்வதற்கு முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும், கோவில் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அழுது கொண்டே கடந்து சென்று தரிசனம் செய்துவிட்டு ஆந்திர மாநில குடும்பத்தினர் வெளியே சென்றனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உலகப்புகழ் பெற்ற சைவத் தலங்களில் முதன்மையானது. இங்குள்ள மலை அருணாசல மலை என்று அழைக்க காரணம் உள்ளது. 'அருண' என்றால் சிவப்பு, 'அசலம்' என்றால் மலை. இந்த மலையே சிவனின் வடிவமாகப் பார்க்கப்படுகிறது.

VIPs Arrive Near the Temple Flagstaff in Tiruvannamalai What Happened to the Family from Andhra

கிரிவலம்

பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலையைச் சுற்றி நடக்கும் 'கிரிவலம்' மிகவும் பிரசித்தி பெற்றது. இது மனதிற்கும் உடலுக்கும் பெரும் அமைதியைத் தரும் என்று நம்புகிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகங்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலின் கிழக்குக் கோபுரம் சுமார் 217 அடி உயரம் கொண்டது. இது தமிழகத்தின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாகும். கோவிலின் நான்கு திசைகளிலும் பிரம்மாண்டமான கோபுரங்கள் அமைந்துள்ளன, இவை பல நூற்றாண்டுகளாகத் தமிழர்களின் கட்டிடக்கலைத் திறனுக்குச் சான்றாக உள்ளன. சிவபெருமான் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் இடையே ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய இடம் இதுதான் என்று புராணங்கள் கூறுகின்றன.

மகா தீபம்

கார்த்திகை மாதத்தில், கோவில் உச்சியில் ஏற்றப்படும் 'மகா தீபம்' உலகப் பிரசித்தி பெற்றது. அந்த நேரத்தில் மலை முழுவதும் பல்லாயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு, நகரம் முழுவதும் ஜோதி மயமாய்க் காட்சி அளிக்கும். உலகப்புகழ் பெற்ற ரமண மகரிஷி வாழ்ந்த இடம் இது. இப்போதும் அவர் வாழ்ந்த ஆசிரமம் திருவண்ணாமலையில் பக்தர்களை ஈர்க்கிறது. மேலும், இது பல சித்தர்கள் தவமியற்றிய புண்ணிய பூமியாகும்.

ஆந்திர பக்தர்கள்

இது அக்னி ஸ்தலம் என்பது ஆந்திராவில் யூடியூபர்களால் அண்மைக்காலத்தில் ஏக பிரபலம் ஆனது. ஆந்திரா தெலுங்கானாவில் திருவண்ணாமலை கிரிவலம் என்பது பலருக்கு ஆன்மீக ரீதியாக விருப்பமான ஒன்றாக மாறி உள்ளது. எப்படி என்றால் பல தெலுங்கு மக்கள் தினமும் வந்து செல்லும் அளவிற்கு மாறி உள்ளது. திருவண்ணாமலைக்கு வரும் ஆந்திர பக்தர்கள் எண்ணிக்கைமிக அதிகமாகி வருகிறத.

பக்தர்கள் அதிகம்

பொதுவாவ திருவண்ணாமலையில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீப திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து, பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

7 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராஜகோபுரம் வழியாக நீண்ட நேரமாக காத்திருந்து கியூ லைன் மூலமாக கோவில் கொடிமரம் அருகே வந்துள்ளனர், அப்போது கோவிலில் பணிபுரியும் காவலர் ஒருவர் காவல்துறை உயர் அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க ஐந்து நபர்களை விஐபி தரிசனத்திற்காக குறுக்கு வழியில் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

கலங்கிய ஆந்திர பக்தர்கள்

அப்போது கியூ லைனில் நீண்ட நேரமாக காத்திருந்த ஆந்திர மாநில குடும்பத்தினர் 5 பேர் நாங்களும் இந்த வழியில் வருகிறோம் என்று காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனால் ஆந்திர மாநில பக்தர்களுக்கும் காவல்துறை மற்றும் கோயில் பணியாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆந்திர மாநில பக்தர்கள் அழுது கொண்டே அங்கிருந்து கலைந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் பக்தர்களிடையே மனக்கசப்பையும் ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+