ஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை!
ஆம்புலன்சில் 2-வது முறையாக இளம்பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்
திருவண்ணாமலை: ரேவதி என்ற இளம்பெண்ணுக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி ரேவதி. 29 வயதாகிறது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள கொளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில் ரேவதிக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதால், மேல்சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரேவதிக்கு பிரசவ வலி அதிகரித்தது. கீழ்பென்னாத்தூரை கடந்து சென்றபோது, மருத்துவ உதவியாளர் குமரன், ரேவதிக்கு பிரசவம் பார்த்தார்.
இதையடுத்து, ஆம்புலன்சிலேயே ரேவதிக்கு சுகப்பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும், சேயும் திருவண்ணாமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக இருக்கிறார்கள்.
இதில் என்ன ஒரு விசேஷம் என்றால், 2 வருஷத்துக்கு முன்பும், ரேவதிக்கு முதல் பிரசவத்துக்கு அழைத்து சென்றபோது, ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தள்ளது. அப்போதும் ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் குமரன்தான் ரேவதிக்கு பிரசவம் பார்த்தாராம்!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications