கையில பணத்தை கொடுங்க.. அரசு வேலை வாங்கி தரேன்.. மொத்தமாக விபூதி அடித்த பாஜக நிர்வாகி.. அதிரடி கைது!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 2.65 லட்சம் மோசடி செய்த புகாரில், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.2.65 லட்சம் மோசடி செய்த புகாரில், பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் (56) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

BJP executive arrested for fraud by getting money for job

திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகனுக்கு வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரன் பல கட்டங்களாக ரூ.2.65 லட்சம் பணம் வாங்கியுள்ளார் ராஜேந்திரன்.

ஆனால், இதுவரை வேலை வாங்கித் தராத நிலையில், பணத்தை திருப்பி கேட்டுள்ளார் சாந்தி. ஆனால், ராஜேந்திரன் பணத்தை திருப்பி தராததால் சாந்தி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்த பாஜக நிர்வாகி ராஜேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தவல்லி என்பவரிடமும் இதேபோல ராஜேந்திரன், அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பாஜக நிர்வாகி மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+