திருவாரூரில் பரபரப்பு.. தேரில் இருந்து தவறி விழுந்து குருக்கள் மரணம்.. திருவிழாவில் சோகம்
கோயில் திருவிழாவில் தேரில் இருந்து விழுந்து அர்ச்சகர் உயிரிழந்தார்
திருவாரூர்: தீபாராதனை காட்டுவதற்காக தேர் மீது ஏற முயன்ற கோயில் அர்ச்சகர், தவறி விழுந்து உயிரிழந்தார். கோயில் திருவிழாவில் நடந்த இந்த சோக சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆடிப்பூர திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கமலாம்பாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் நிறைய பேர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரினை கொண்டதுதான் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேர். இந்த கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வடம் பிடித்தனர்
தொடர்ந்து நடைபெற்ற ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. மாலை 6 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் நிறைய பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

குப்புற விழுந்தார்
தேர்கோயிலுக்கு வந்து சேர இரவு ஆகிவிட்டது. அப்போது, தீபாராதனை செய்வதற்காக முரளி என்ற 56 வயது கோவில் தலைமைக் குருக்கள் தேர் மீது ஏறினார். ஆனால் நிலை தடுமாறி தலைக்குப்புற கீழே விழுந்துவிட்டார். இதில் முரளிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விசாரணை
உடனடியாக அங்கிருந்தோர் குருக்களை மீட்டு திருவாரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் குருக்கள் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்
உயிரிழந்த முரளி, பரம்பரை பரம்பரையாக குருக்கள் குடும்பத்தின் அடிப்படையில் இந்த கோவிலில் வேலை பார்த்து வந்தவராம். இவரது தாத்தா, அப்பாவுக்கு பிறகு முரளி தலைமை குருக்களாக பொறுப்பேற்றார். அதுவும் சின்ன வயசிலேயே இந்த பணிக்கு வந்துவிட்டார். இவரது மகன், சகோதரர்களும் குருக்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications