திருவாரூரில் பரபரப்பு.. தேரில் இருந்து தவறி விழுந்து குருக்கள் மரணம்.. திருவிழாவில் சோகம்
கோயில் திருவிழாவில் தேரில் இருந்து விழுந்து அர்ச்சகர் உயிரிழந்தார்
திருவாரூர்: தீபாராதனை காட்டுவதற்காக தேர் மீது ஏற முயன்ற கோயில் அர்ச்சகர், தவறி விழுந்து உயிரிழந்தார். கோயில் திருவிழாவில் நடந்த இந்த சோக சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆடிப்பூர திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கமலாம்பாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் நிறைய பேர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரினை கொண்டதுதான் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேர். இந்த கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வடம் பிடித்தனர்
தொடர்ந்து நடைபெற்ற ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. மாலை 6 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் நிறைய பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

குப்புற விழுந்தார்
தேர்கோயிலுக்கு வந்து சேர இரவு ஆகிவிட்டது. அப்போது, தீபாராதனை செய்வதற்காக முரளி என்ற 56 வயது கோவில் தலைமைக் குருக்கள் தேர் மீது ஏறினார். ஆனால் நிலை தடுமாறி தலைக்குப்புற கீழே விழுந்துவிட்டார். இதில் முரளிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விசாரணை
உடனடியாக அங்கிருந்தோர் குருக்களை மீட்டு திருவாரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் குருக்கள் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்
உயிரிழந்த முரளி, பரம்பரை பரம்பரையாக குருக்கள் குடும்பத்தின் அடிப்படையில் இந்த கோவிலில் வேலை பார்த்து வந்தவராம். இவரது தாத்தா, அப்பாவுக்கு பிறகு முரளி தலைமை குருக்களாக பொறுப்பேற்றார். அதுவும் சின்ன வயசிலேயே இந்த பணிக்கு வந்துவிட்டார். இவரது மகன், சகோதரர்களும் குருக்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications