ஊர் கூடி தேர் இழுப்போம்.. கஜா சூறையாடிய இந்தப் பள்ளிக்கு கை கொடுங்கள்!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: கஜா புயல் தாக்கி விட்டு ஓடி விட்டது. எப்படி எழுந்து நிற்பது என்று தெரியாமல் காவிரி டெல்டா மாவட்டங்கள் தடுமாறிக் கொண்டுள்ளன.

நிவாரணப் பணிகள் இன்னும் பல காலத்துக்குத் தொடர்ந்தாக வேண்டிய நிலையில்தான் டெல்டா மாவட்டங்கள் உள்ளன. தற்போது பல்வேறு ஊர்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளன.

இவற்றை சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பெருமளவில் மக்கள் உதவி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு பள்ளியைப் பற்றித்தான் இதில் பார்க்கப் போகிறோம்.

வித்வான் பள்ளி

வித்வான் பள்ளி

திருத்துறைப்பூண்டி அருகில் உள்ளது வித்வான் மானைக்கால் உதவி தொடக்கப்பள்ளி. இது ஒரு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகும். இதனை இப்பகுதி மக்கள் ரேவதி ஸ்கூல் என்றே அழைப்பார்கள். இது 1955ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

கடும் சேதம்

கடும் சேதம்

சமீபத்தில் நிகழ்ந்த கஜா புயலால் இந்த பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி திருத்துறைப்பூண்டியில் உள்ள அண்ணா நகரில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் தற்போது நல்ல நிலைமையில் உள்ளனர்.

உதவி தேவை

உதவி தேவை

இப்பகுதி ஏழை, எளிய மக்கள் படிக்கும் இந்த பள்ளியை சீரமைக்க உங்கள் உதவி தேவை. தற்போது மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமர்ந்து தங்கள் படிப்பை தொடருவது வேதனையான விஷயமாகும்.

நீங்களும் உதவலாம்

நீங்களும் உதவலாம்

இந்தப் பள்ளியை சீரமைக்க உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் ஆசைத்தம்பி சரவணன் - 9715280151.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+