Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல ஓட்டலில் பொடி தோசை சாப்பிட்டாராம் திருவாரூர் பிரவீன்.. இப்ப மன்னார்குடியே பரபரக்குது.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: மன்னார்குடி பிரவீன்குமார் பொடி தோசை ஆர்டர் செய்தாராம்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா? திருவாரூரில் ஒரே பரபரப்பாகிவிட்டது. இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருககிறது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.. ஆனால், டெலிவரி அனுபவங்கள்தான், மிகவும் மோசமானதாக இருப்பதாக புகார்கள் எழுந்துபடி உள்ளன.

thiruvarur mannargudi dosa

சிலசமயம், நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறொரு பொருள் டெலிவரி செய்யப்பட்டுவிடுகிறது.. அல்லது நாம் ஆர்டர் செய்த பொருளே இல்லாமல், வெறும் பார்சல் டெலிவரி செய்யப்பட்ட அனுபவங்களும் நடந்துள்ளன.. சில சமயம், பார்சலுக்குள் உயிரினங்கள் இறந்துகிடப்பதையும் காண முடிகிறது. இது தொடர்பான புகார்களும் அடிக்கடி எழுந்துவருவதால், சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர்: இதோ நேற்றுகூட மன்னார்குடியில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்பி சிவம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்.. 23 வயதாகிறது.. வடசேரி சாலையிலுள்ள தனியார் பள்ளி அருகே புத்தக கடை ஒன்றை வைத்திருக்கிறார்.
இவர் கடையை திறந்ததுமே ஆன்லைனில் பிரபல உணவு நிறுவனத்தின் "ஆப்" மூலம் பொடி தோசை ஆர்டர் செய்திருக்கிறார்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மன்னார்குடியில் உள்ள அந்த பிரபல சைவ உணவகத்தில் இருந்து பொடி தோசையும் வந்திருக்கிறது..

எரிச்சல்: ஆசை ஆசையாக பார்சலை பிரித்து பிரவீன்குமார் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது. அப்போது பொடி தோசையில் பாதி அளவில் பூரான் ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. அதாவது, பாதி பூரானை அவர் கடித்து சாப்பிட்டிருக்கலாம். அதுதான் தொண்டையில் எரிச்சலை தந்துள்ளதாக தெரிகிறது.

பிறகு பிரவீன் குமாருக்கு வாந்தி ஏற்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.. கடைக்கு அப்போது வந்திருந்த கஸ்டமர்கள் இதை பார்த்து பதறிப்போய், பிரவீன்குமாரை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆய்வு: இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் அழகுவேல் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.. அப்போது, ஓட்டலிலிருந்த உணவு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து எடுத்து சென்றனர்.. பொடி தோசையில் பூரான் இறந்து கிடந்த சம்பவம் மன்னார்குடியையே பரபரப்பாக்கிவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+