வரலைன்னு சொல்லு.. திருவாரூர் இடைத்தேர்தல்.. இப்போதாவது ரஜினி அந்த அறிவிப்பை வெளியிடுவாரா?
நடிகர் ரஜினிகாந்த் நடக்க உள்ள திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன் தனது கட்சியை தொடங்கி தேர்தலை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

திருவாரூர்: நடிகர் ரஜினிகாந்த் நடக்க உள்ள திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன் தனது கட்சியை தொடங்கி தேர்தலை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மிக முக்கியமான தொகுதியான திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாதம் நடக்க உள்ள இந்த தேர்தலில் தமிழக அரசியலில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

அட எவ்வளவு வேகம்
ரஜினி இப்போதுதான் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தது போல இருந்தது. ஆனால் காலம் மிக வேகமாக சென்றுவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. இன்னும் அவர் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. அவரது ரசிகர்களும் அந்த அறிவிப்பிற்குத்தான் காத்து இருக்கிறார்கள்.

தேர்தலுக்காக
இந்த நிலையில் திருவாரூர் தேர்தலுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவாரா என்ற கேள்வி உருவாகி இருக்கிறது. இந்த பொங்கலுக்கு அவர் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தது. அதேபோல் தேர்தலை முன்னிட்டு தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா என்று கேள்வி உருவாகி இருக்கிறது.

கட்சி நிற்குமா?
ரஜினி கட்சி தொடங்கும்பட்சத்தில் வேகவேகமாக தனது வேட்பாளரை அறிவித்து, தேர்தலை சந்திப்பாரா, இனியாவது தனது அதிரடியை ரஜினி காட்டுவாரா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். வரும் மே மாதம் நடக்க உள்ள, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு ''வார்ம் அப்'' போல இந்த தேர்தலில் வேட்பாளரை நிற்க வைத்து தேர்தலை சந்திப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

யாருக்காவது ஆதரவு
ஒருவேளை கட்சி தொடங்காமல் ரஜினி எதாவது கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்றும் அவரது ரசிகர்கள் கேட்கிறார்கள். முக்கியமாக பாஜக அல்லது அதிமுகவிற்கு தேர்தலில் ஆதரவாக குரல் கொடுத்து பிரச்சாரம் செய்ய வருவாரா என்று விவாதம் உருவாகி இருக்கிறது. தேர்தலுக்கு சரியாக 28 நாட்கள் உள்ள நிலையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications