Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரத்தி துரத்தி வந்த மேனேஜர்.. அரளி விதையை அரைத்து குடித்த தமிழ்செல்வி.. திருவாரூர் கொடுமை..!

துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: பாலியல் தொல்லை அத்துமீறிவிட்டதால், மன உளைச்சல் அதிகமாகி தமிழ்செல்வி அரளி விதை அரைத்து குடித்துவிட்டார்.. துப்புரவு தொழிலாளியான தமிழ்செல்வி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் நகர் பகுதியில், அழகிரி காலனியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி.. 30 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் சரம் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்...

 தூய்மை பணியாளர்

தூய்மை பணியாளர்

அதில் ஒருவர்தான் தமிழ்செல்வி.. தூய்மை பணியாளராக 5 வருடங்களாக இந்த பணியை அவர் பார்த்து வருகிறார்.. ஆனால், சரம் ஒப்பந்த நிறுவனத்தின் மேனேஜர் முத்துச்செல்வன் என்பவர், தமிழ்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது... எத்தனையோ முறை எதிர்ப்பை காட்டியம் மேனேஜர் தொடர்ந்து டார்ச்சர் தந்துள்ளதாக தெரிகிறது.. ஒருகட்டத்தில் மேலிடத்துக்கு இதை புகாராகவும் கொண்டு போயுள்ளார் தமிழ்செல்வி,.

 பாலியல் டார்ச்சர்

பாலியல் டார்ச்சர்

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு வந்த தமிழ்ச்செல்வி, மடப்புரம் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.. அப்போது திடீரென மயங்கி சரிந்துவிழுந்தார்.. இதை பார்த்து பதறி போன சக ஊழியர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோதுதான், தமிழ்ச்செல்வி விஷம் அருந்தி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழ்செல்வியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் நடந்த விஷயத்தை எல்லாம் போலீசில் சொன்னார்..

வாக்குமூலம்

வாக்குமூலம்

"என்னுடைய ஒப்பந்த நிறுவனமான சரம் நிறுவனத்தின் மேனேஜர் முத்துச்செல்வன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.. இதை பற்றி பல முறை என்னுடைய உயர் அதிகாரிகளுக்கு புகார் சொன்னேன்.. அவர்களும் முத்துச்செல்வனை அழைத்து கண்டித்தனர்.. ஆனால் இன்னைக்கு இன்று வேலையில் இருந்தபோது, என்னை முத்துசெல்வன் ஆபீசுக்கு வரசொன்னார்.. வேலை விஷயமாக இருக்கும் என்று நினைத்து சென்றேன்..

 அரளி விதை

அரளி விதை

ஆனால் அங்கு என்னிடம் தகாத முறையில் என்னிடம் நடந்து கொண்டார்... அதனால்தான் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றேன்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.. இதையடுத்து, தமிழ்ச்செல்வி திருவாரூர் போலீசில்புகார் தந்ததையடுத்து, போலீசார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+