திருமணத்துக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. லாரி டிரைவர் கைது
திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குரபல கோட்டா அருகே பெற்றோருடன் திருமணத்திற்கு சென்ற ஆறு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி டிரைவர் முகமது ரபி கைது செய்யப்பட்டார்.
சித்தூர் மாவட்டத்தில் தம்புள்ள பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி சித்தா ரெட்டி. அவருடைய மனைவி உஷாராணி.
இவர்கள் குரபலகோட்டா அருகே உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 8 ம் தேதி அதிகாலை நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தங்களுடைய ஆறு வயது மகள் வர்ஷிதாவுடன் சென்றிருந்தனர்.
அன்று இரவு திருமண வரவேற்பு முடிந்து பின்னர் இரவு 12 மணி அளவில் குழந்தை வர்ஷிதாவை காணவில்லை.
பல இடங்களில் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை.
இதனால் காவல் நிலையத்தில் வர்ஷிதாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.

காணவில்லை
இரவு முதல் வர்ஷிதாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அன்று காலை திருமண மண்டபம் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வர்ஷிதா உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார் வர்ஷிதா உடலை பார்வையிட்டு குழந்தை இறந்தது எப்படி என்று ஆய்வு செய்தனர்.

பிரேத பரிசோதனை
அப்போது வர்ஷினி உடலில் ஆங்காங்கே ரத்தக்கறை படிந்து இருப்பது தெரியவந்தது.
சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வர்ஷிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

வர்ஷிதா
இந்த நிலையில் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் அன்று இரவு வர்ஷிதா சென்றது தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

சிறுமி பலாத்காரம்
எனவே அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்த 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதும், சிறுமியின் உடலில் ஆங்காங்கே இரத்தக் கறைகள் படிந்து இருப்பதும் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை
இந்த நிலையில் வழக்கு பதிவு செய்து சிறப்பு குழுக்களை அமைத்து மதனபள்ளி போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். குற்றவாளியை பிடிக்க போலீசார் அவருடைய படத்தையும் வெளியிட்டனர்.
தம்பலப்பள்ளி அருகே உள்ள பசினிகொண்டாவை சேர்ந்த லாரி டிரைவர் முகமது ரபி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

லாரி டிரைவர் கைது
விசாரணையில் குழந்தை வர்ஷிதாவை தான் பலாத்காரம் செய்து கொலை செய்ததை முகமது ரபி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரு்ம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications