நாளை ஆந்திரா சட்டசபை தேர்தல்.. ஹைதராபாத் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டமோ, கூட்டம்
திருப்பதி: ஆந்திராவில் நாளை சட்டசபை மற்றும் லோக்சபா வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, ஹைதராபாத்தில் பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
நாளை நடைபெற இருக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவில் ஆந்திராவில் உள்ள அனைத்து 25 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல, 175 சட்டசபை தொகுதிக்கும் நாளை, வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாளை காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த நிலையில் வாக்குப் பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாட்டின் பேரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அடையாள மை, வாக்காளர் பட்டியல் ஆகியவை உள்ளிட்ட தேவையான அனைத்து பொருட்களும் வாக்குப் பதிவு மையங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக ஆந்திரா முழுவதும் வாக்குசாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆந்திராவை சேர்ந்த பலர் ஹைதராபாத்தில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் பணியில் இருப்பதால் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக நேற்று மாலை முதல் சொந்த ஊர் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஹைதராபாத்தில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் குவிந்தனர். இதனால் ரயில்களில் இடம் கிடைக்காமல் நிலை ஏற்பட்டது. மேலும் பேருந்துகளிலும் இடமில்லாத காரணத்தால் தனியார் சொகுசுப் பேருந்து நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்து பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications