சந்திரயான் -3 வெற்றி பெற மாடலை வைத்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு!
திருப்பதி: விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் - 3 விண்கலம் வெற்றி பெற திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான் -3 சிறிய மாதிரியை சுவாமி சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் புதிய சரித்திரமாக சந்திரயான்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், சந்திரயான் -3 என்பது சந்திரயான் -2 விண்கலத்தின் தொடர்ச்சி. நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான சிக்கலான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் அது பணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோவரில் உள்ள பல கேமராக்களின் உதவியுடன், படங்களைப் பெற முடியும் என்றார்.
இதனிடையே சந்திரயான் -3 விண்கலம் நாளை விண்ணில் வெற்றிகரமாக செல்ல வேண்டும் என்பதற்காக இன்று காலை திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர். சந்திரயான் -3 மாதிரியை சுவாமி சன்னதியில் வைத்து இந்த வழிபாடு நடத்தப்பட்டது.
#WATCH | Andhra Pradesh | A team of ISRO scientists team arrive at Tirupati Venkatachalapathy Temple, with a miniature model of Chandrayaan-3 to offer prayers.
— ANI (@ANI) July 13, 2023
Chandrayaan-3 will be launched on July 14, at 2:35 pm IST from Satish Dhawan Space Centre, Sriharikota, ISRO had… pic.twitter.com/2ZRefjrzA5
சந்திரயான் -1 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது. சந்திரயான் -2 வெற்றி அடையவில்லை. தற்போது சந்திரயான் -3 விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான் -3 நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் அது பணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4-வது நாடு என்ற பெருமையை நமது நாடு பெறும் என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications