நடுவானில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு.. திருப்பதியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
ஐதராபாத்: சமீபகாலமாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதும், அவசர அவசரமாக தரையிறக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், திருப்பதியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, திருப்பதில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விமானத்தில் பயணித்த மற்றும் விபத்துக்குள்ளான விடுதியில் இருந்த மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. பின்னர், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருகிறது. இதனால், பயணிகளில் பாதுகாப்பு கருதி உடனடியாக விமானங்கள் தரையிறக்கப்படுகின்றன.
இந்நிலையில், திருப்பதியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, திருப்பதில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று இரவு 7.55 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணிகள் பயணித்தனர். இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது, விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது விமானிக்கு தெரியவந்துள்ளது.
இதனால், சுமார் 30 நிமிடங்கள் நடுவானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்துள்ளது. பின்னர், இண்டிகோ விமானத்தை விமானி மீண்டும் திருப்பதியில் அவசர அவசரமாக தரையிறக்கினார். இதைத்தொடர்ந்து, விமானத்தில் பயணித்த விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில், விமானிகள், பயணிகள் என யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications