ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சுவாமி தரிசனம்... நாளை முதல்வராக பதவியேற்கிறார்
Recommended Video
திருப்பதி: ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள ஜெகன்மோகன்ரெட்டி இன்று குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
தேர்தலில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தார். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணியளவில் தொடங்க உள்ளது.
முன்னதாக, முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி ஏழுமலையான் பிரசாதத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். ஜெகன்மோகன் ரெட்டியின் கையில் மஞ்சள் கயிறு கட்டினர். முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதே போல், நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று தரிசனம் செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications