"என்னை ஒருத்தரும் மதிக்கிறது இல்லை".. கண்ணீர் விட்டு அழுத ரோஜா.. தேவஸ்தானம் மீது குற்றச்சாட்டு
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது ரோஜா கண்ணீர் புகார் தந்துள்ளார்
திருப்பதி: "என்னை ஒருத்தர் கூட மதிக்கிறது இல்லை.. திருப்பதி கோயிலில் எனக்கு துளியும் மரியாதை தருவதில்லை" என்று நடிகை ரோஜா கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து போவார்கள்.. இந்நிலையில், திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது, உரிமை குழு தலைவரிடம் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில தொழிற்சாலை துறை உட்கட்டமைப்பு கழக தலைவருமான நடிகை ரோஜா ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
அவர் அதிகாரியிடம் சொல்லும்போது, "என்னை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்... எனது பதவிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.. அதை யாருமே தருவதில்லை.. ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்தோடு சென்றாலும், அப்போதும் தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை தருவதில்லை.. என்னை யாருமே ஒரு பொருட்டாக கூட எடுத்து கொள்வதில்லை" என்று கண்ணீருடன் சொல்லவும், அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பு தொற்றி கொண்டது.
இதையடுத்து ரோஜாவின் முறையீடு பற்றி அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என உரிமை குழு தலைவர் தெரிவித்தார்... ஏற்கனவே ரோஜா, இதற்கு முன்பும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள், தனது சொந்த கட்சியினர் மதிப்பதில்லை என கட்சி மேலிடத்திற்கு புகார் தெரிவித்திருந்தார்... இப்போது தேவஸ்தான அதிகாரிகள் தன்னை மதிப்பதில்லை என்று சொல்லி உள்ளார்.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்பது அனைத்து தரப்பு மக்களாலும் பரவலாக சொல்லப்படும் குற்றச்சாட்டாகும்.. ஆனால், இப்போது அம்மாநிலத்தின் நகரி தொகுதி எம்எல்ஏவே அந்த குற்றச்சாட்டை சொல்லி உள்ளதுதான் பரபரப்பாகிவிட்டது.
இதில் ஒரு ஸ்பெஷல் என்றால், திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக உள்ள சுப்பாரெட்டி என்பவர் முதல்வர் ஜெகன்மோகனின் சித்தப்பாவாம்.. தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலராக உள்ள தர்மாரெட்டி, ஜெகன்மோகனின் சின்ன மாமனாராம்!
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications