தப்பாட்டத்துக்கு ஆடிய ரோஜா.. உற்சாகமூட்டிய கலைஞர்கள்.. சொந்த தொகுதியில் செம்ம!
திருப்பதி;ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா. இவர் தனது தொகுதிக்கு உள்பட்ட தப்பாட்ட கலைஞர்களுக்கு 'தப்பு' மேளக்கருவியை வழங்கியதுடன் அவர்களுடன தப்பாட்டம் ஆடி மகிழ்ந்தார்.
Recommended Video
நடிகர் விஜய்சேதுபதி தர்மதுரை படத்தில் தப்பாட்டம் கலைஞர்களுடன் நடமாடுவார். அப்போது விஜய்சேதுபதி கூறும் போது , உங்களுக்கு யாரு தப்பாட்டம் என்று பேரு வைத்தது. நீங்கள் ஆடுவது சரியான ஆட்டம் என்று கூறி ஆடுவார்.
கிட்டத்தட்ட அதேபோன்று தான்.. ஆனால் கொஞ்சம் வேற மாதிரி.. நடிகை ரோஜா தப்பாட்டமே அடித்து ஆடினார். தப்பாட்ட கருவியை எடுத்து குச்சியால் அடித்து உற்சாகமாக ஆடினார். அவருடன் கலைஞர்களும் அதேபோல் தப்பாட்டம் ஆடினார்கள்.

ஆந்திராவில் செட்டில்
தமிழ், தெலுங்கு உள்படதென்னிந்திய மொழி படங்களில் புகழ் பெற்ற நடிகையாவார். இவர் 90களில் ரஜினி, கார்த்திக், பிரபு , விஜயகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். அதன்பிறகு இயக்குனர் ஆரகே செல்வமணியை காதலித்து திருமணம் செய்தார். தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார்.

நகரி தொகுதி
அங்கு ஆளும் கட்சியான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக மாறினார். கடந்த 2019ல் நடந்த தேர்தலில் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

உடைகள், தப்பு வழங்கினார்
இந்நிலையில் தனது சொந்த தொகுதியான சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் நடிகை ரோஜா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக புத்தூரில் உள்ள 72 தப்பாட்ட கலைஞர்களுக்கு தப்பு, கொலுசு, உடைகள் ஆகியவற்றை வழங்கினார்.

தப்பாட்டம் ஆடிய ரோஜா
பின்னர் அவர்களுடன் தப்பாட்டம் ஆடி பேசிய நடிகை ரோஜா, தனது தொகுதியில் உள்ள தப்பாட்டக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு இந்த பொருட்களை அரசு மூலம் பெற்று வழங்கியதாக கூறினார்.












Click it and Unblock the Notifications