தாலியை வாசற்படியில் தொங்கவிட்ட விதவை பெண்.. குமுறி குமுறி அழுது.. தாசில்தார் ஆபீசில் திடீர் பரபரப்பு
பெண் ஒருவர் தாலியை கழட்டி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பதி: தாலியை எடுத்து, தாலுகா ஆபீசில் கட்டி தொங்கவிட்டு, ஓவென அழுது ஒப்பாரி வைத்துள்ளார் ஒரு விதவை பெண்.. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பதறிவிட்டனர்!
தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், மணலா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேசம்... இவரது மனைவி மங்கா.
ராஜேசம் ஒரு விவசாயி.. அவருக்கு அதே கிராமத்தில் 2 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது... ஆனால், கடந்த 3 வருஷங்களுக்கு முன்பு உடம்பு சரியில்லாமல் ராஜேசம் இறந்துவிட்டார்..

அதிர்ச்சி
இதனை அறிந்த தாசில்தார் அலுவலக ஊழியர்கள், ராஜேசம் நிலத்தை வேறு பெண்ணிற்கு மாற்றி பட்டா வழங்கி இருக்கிறார்கள்.. இந்த விஷயம் தெரிந்து அதிர்ந்து போனார் மங்கா.. அதனால், தன் கணவருக்கு சொந்தமான நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி பட்டா வழங்க வேண்டும் என கேட்டு வந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

புலம்பல்
கணவன் இழந்த நிலையில், கஷ்டப்பட்டு வருகிறேன்.. 2 பிள்ளைகளையும் வளர்க்கவே கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. இதில் எப்படி லஞ்சம் தர முடியும்.. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை செய்து தாருங்கள் என்று கேட்டுள்ளார்.. ஆனால், அதிகாரிகள் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்று கறாராக சொல்லிவிட்டனர்.

உதவி
இப்படியே 3 வருடமாக அலைந்து திரிந்து வந்துள்ளார்.. இதற்காக யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமலும் தவித்துள்ளார்.. தினமும் காலையில் தாசில்தார் ஆபீசுக்கு வந்து உட்கார்ந்துவிடுவாராம் மங்கா.. ஆனாலும் அதிகாரிகள் இவரை பொருட்படுத்துவதே இல்லையாம்.. சாயங்காலம் வரை உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்துவிட்டு சோகத்துடன் வீடு திரும்பி வந்துள்ளார். நேற்றும் அப்படித்தான் சென்றுள்ளார்.. லஞ்சம் தந்தால்தான் ஃபைல் நகரும் என்று சொல்லி உள்ளனர்..

பரபரப்பு
இதனால் மனவேதனையும் ஆத்திரமும், விரக்தியும் அடைந்த மங்கா, "இதோ என் கணவர் இறந்துவிட்ட நிலையில், இந்த தாலி மட்டும்தான் என்கிட்ட இருக்கு.. இதை நீங்களே வெச்சுக்குங்க.. இதை லஞ்சமாக வைத்து கொண்டாவது எங்க நிலத்திற்கான பட்டாவை மாற்றி குடுங்க" என்று அந்த தாலியை தாசில்தார் அலுவலக ஆபீசில் தொங்கவிட்டு கதறி அழுதார்.. அந்த ஆபீசின் நுழைவாயிலேயே இரும்பு கேட்டில் தாலி தொங்கி கொண்டிருந்தது.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications