ஆந்திராவில் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேமித்து.. சாகும் போது லட்சாதிபதியாக இறந்த பிச்சைக்காரர்
திருப்பதி: ஆந்திராவில் பிச்சை எடுத்து 15 ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேமித்த பிச்சைக்காரர் கடைசியில் லட்சாதிபதியாக உயிரிழந்து உள்ளார். அவர் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது பையில் இருந்த ரூ.1.83லட்சத்தை போலீசார் கைப்பற்றினர்.
ஆந்திராவின் ராஜமகேந்திரவரத்தில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு காஞ்சி நாகேஸ்வரராவ் என்பவர் பிச்சை எடுத்து வந்தார்.

இந்த கோயில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் கோயிலில் பிச்சை எடுத்து காஞ்சி நாகேஸ்வரராவ் பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அவர்கள் தட்டில் போடும் பணத்தை வாங்கி கொண்டு அங்கேயே கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சி நாகேஸ்வரராவின் உடல்நிலை அண்மையில் மிகவும் மோசம் அடைந்தது. கடந்த சனிக்கிழமை இரவு கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது அவர் உயிரைவிட்டார்.
இதுகுறித்து அறிந்த ராஜமகேந்திரவரம் கோயில் அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கோயிலில் விசாரணை நடத்தினர். மேலும் காஞ்சி நாகேஸ்வர ராவ் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் ரூ.1.83 லட்சம் இருப்பதை கண்டு போலீசார் ஆச்சர்யம் அடைந்தனர். இந்த பணத்தை காஞ்சி நாகேஸ்வரராவ் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்ததை விசாரணையில் போலீசார் அறிந்தனர். இதையடுத்து போலீசார், அந்த பணத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்தை எடுத்து நாகேஸ்வரராவின் இறுதிச் சடங்கை நடத்தினர். மீதமுள்ள பணத்தை அப்படி கோயிலில் வாழும் சாதுக்களுக்கே அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications