திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) பணியாற்றும் 743 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதில் திருமலையில் ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் சில அர்ச்சகர்களுக்கும் கொரோனா வந்திருப்பதை அதிகாரி உறுதி செய்தார்.
பாதிக்கப்பட்ட 743 பேரில், மூன்று ஊழியர்கள் தொற்றுநோயால் இதுவரை இறந்துவிட்டார்கள். சுமார் 402 பேர் இதுவரை தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர், 338 பேர் இங்குள்ள பல்வேறு கோவிட் பராமரிப்பு வசதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் திருமலையில் உள்ள புகழ்பெற்ற பகவான் வெங்கடேஸ்வரர் கோயில், கொரோனா வைரஸால் தொற்று பரவியதன் விதிக்கப்பட்ட லாக்டவுனால் மூடப்பட்டிருந்தது. இரண்டரை மாதங்களுக்கு பின்னர் ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. மத்திய அரசு அறிவித்த தளர்வுகளை ஏற்று திருப்பதி கோயிலை ஆந்திர அரசு திறந்தது. ஆனால் அதன்பின் எதிர்பாராத விதமாக ஆந்திராவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவியது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கஜானாவை நிரப்பும் நோக்கத்துடன் திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோயிலை மீண்டும் திறந்து விட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.
பக்தர்களின் வேண்டுகோளின் பேரில் பழமையான இந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டது என்றும் கடுமையான கோவிட் -19 நடவடிக்கைகளைப் பின்பற்றி பக்தர்கள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications