காளஹஸ்திக்கு போய்விட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கலாமா? ஆன்மீகம் சொல்வது என்ன?
திருப்பதி: திருப்பதிக்கு போகும் போது முதலில் காளஹஸ்திக்கு சென்றுவிட்டு ஏழுமலையானை தரிசிக்கலாமா என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் திருப்பதிக்கு போய்விட்டு வரலாமா என்ற கேள்விக்கான பதிலையும் பார்க்கலாம்.
பொதுவாக திருப்பதிக்கு செல்வோருக்கு ஒரு குழப்பம் இருக்கும். அதாவது திருப்பதிக்கு தற்போது ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை புக் செய்துவிடுகிறோம். முன் கூட்டியே திருப்பதிக்கு செல்லும் போது அந்த நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காக திருகாளஹஸ்திக்கு போய்விட்டு பிறகு திருப்பதிக்கு செல்லலாம் என கருதுகிறார்கள்.

இது தவறான வழி முறை என்கிறார்கள். விஷ்ணு, சிவன் கோயில்களுக்கு சென்றால் வீட்டிற்கு வரும் போது சிவன் கோயிலில் இருந்துதான் வர வேண்டும் என சொல்கிறார்கள். இதனால் திருப்பதியை பார்த்துவிட்டு பிறகு காளஹஸ்திக்கு செல்ல வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
இதனால் பலருக்கும் இது போன்ற குழப்பங்கள் இருப்பதால் அதை தெளிவுப்படுத்துகிறோம். இதுகுறித்து ஜோதிடர் ராஜயோகம் கே.ராம் என்பவர் புதுயுகம் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதாவது காளஹஸ்திக்கு ராகு தோஷம், சர்ப தோஷம், காலசர்ப தோஷம், களத்திர தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்ய செல்ல வேண்டும்.
எந்தவொரு பரிகார ஸ்தலமாக இருந்தாலும் அங்கு ஒரு இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் செய்ய வேண்டும். அதாவது காளஹஸ்திக்கு சென்று அங்கு ஒரு நாள் இரவு தங்கிவிட்டு பிறகு அடுத்த நாள் பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு அங்குள்ள பாதாள விநாயகரை வழிபட வேண்டும். அவரிடம் உங்கள் வேண்டுதலை வைத்துவிடுங்கள்.
இதன் பிறகு உங்கள் தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். அதன் பிறகு தானம் தர்மங்களை செய்யலாம். அதாவது திருப்பதி, காளஹஸ்தி, ராமேஸ்வரம், காசி உள்ளிட்ட தலங்களை பிரிக்க வேண்டும். அதாவது பரிகார ஸ்தலம், புண்ணிய ஸ்தலம், ஆன்மீக ஸ்தலம் ஆகியவை ஆகும்.
காளஹஸ்தி என்பது பரிகார ஸ்தலம், திருப்பதி என்பது புண்ணிய ஸ்தலம். பரிகார ஸ்தலத்திற்கு சென்றுவிட்டு புண்ணிய ஸ்தலத்திற்கு செல்லக் கூடாது. காளஹஸ்திக்கு சென்றுவிட்டு வீட்டில் ஒரு இரவாவது தங்கிவிட்டு அடுத்த நாள் திருப்பதிக்கு செல்லலாம். இதனால் உங்கள் தோஷம் நிவர்த்தி ஆகும்.
ஒரு வேளை வீடு ரொம்ப தூரத்தில் இருக்கிறது என்றால் கீழ் திருப்பதிக்கு சென்று அங்கு அறை எடுத்து ஒரு நாள் இரவு தங்கி அங்கு குளித்துவிட்டு அடுத்த நாள் திருப்பதிக்கு செல்லுங்கள். அப்போதுதான், திருப்பதிக்கு சென்றால் கிடைக்க வேண்டிய திருப்பமும் புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications