திருப்பூர் அருகே பயங்கரம்.. 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், அவர் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி உடல் நிலையில் பிரச்சனை ஏற்படவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, அந்தச் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்ததை அடுத்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சிறுமியிடம் விசாரித்ததில், வீட்டுக்கு அருகே இருக்கும் சிலர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்தச் சிறுமியை, அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் உடுமலையைச் சேர்ந்த ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவாபாரதி (22) ஆகிய 6 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் 14, 15, 16 வயது கொண்ட சிறுவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் சிறுவர்கள் 3 பேரையும் திருப்பூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற 6 பேரையும் கோவை மத்திய சிறையிலும் அடைத்துள்ளனர். மைனர் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications