5 பேர் நசுங்கி பலி.. திருப்பூர் அருகே கார்-லாரி மோதல்.. கோவில் சென்று திரும்பியபோது ஷாக் விபத்து
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும், டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 2 தம்பதி உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் பழனி கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மணக்கடவு எனும் இடம் உள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் மணக்கடவு அருகே காரும், டேங்கர் லாரியும் சென்று கொண்டிருந்தது.

திடீரென்று இந்த 2 வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. ஒரே சாலையில் காரும், டேங்கர் லாரியும் எதிரெதிரே வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் பயணித்தவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று காரில் பயணித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிவந்தது.
மேலும் படுகாயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இன்னொருவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையின்போது காரில் பயணித்தவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து சொந்த ஊர் திரும்பியபோது டேங்கர் லாரியுடன் மோதி விபத்தில் சிக்கி 5 பேர் பலியானது தெரியவந்தது.
அதோடு இறந்தவர்களில் 3 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் என்பதும் தெரியவந்தது.
அதாவது காரில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 65), அவரது மனைவி செல்வி (50), கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வஞ்சியம்மா நகரை சேர்ந்த தமிழ்மணி (50), அவரது மனைவி சித்ரா (45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த கலாராணி (55)என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்தது.
இறந்தவர்களின் உடல் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications