18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி- திருப்பூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் தொடங்கி வைத்தார்.
Recommended Video
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி- திருப்பூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். சேலம் உருக்காலை வளாகத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை வளாகத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலான மொத்தம் 3.6 கோடி பேர் கொரோனா தடுப்பூசியால் பயனடைவர்.












Click it and Unblock the Notifications