இதுவரை டூர் போனதே இல்லை.. முதல் முறையாக இலங்கை சென்ற திமுக மா.செ.. குண்டுவெடிப்பால் திரும்பிய சோகம்
இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக நிர்வாகி
Recommended Video
சென்னை: "இதுவரைக்கும் நான் டூர் எல்லாம் போனதே இல்லை.. அதனால இலங்கைக்கு போகலாம்" என்று ஆசை ஆசையாக சென்ற திமுக பிரமுகர் ஒருவர் குண்டுவெடிப்பில் இருந்து உயிர்தப்பி வந்திருக்கிறார்!
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ். இவர்தான் இந்த குண்டுவெடிப்பில் இருந்து தப்பியவர். சில தினங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. அதனால் அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் நிர்வாகிகளுடன் செல்வராஜ் செயல்பட்டார்.
தேர்தலும் முடிந்த நிலையில், எங்காவது டூர் போகலாம் என்று ஆசைப்பட்டார் செல்வராஜ். நண்பர்கள், கட்சி நிர்வாகிகளிடம் "இதுவரைக்கும் நான் டூர் போனதே இல்லை.. அதுவும் வெளிநாடு எல்லாம் போனதே கிடையாது. இந்த முறை எங்காவது போகலாம்" என்று சொல்லி இருக்கிறார். அதன்படியே இலங்கை போவதென முடிவெடுத்து கடந்த 20-ம் தேதி 6 பேர் புறப்பட்டிருக்கிறார்கள்.

குண்டுவெடிப்பு
இலங்கையில் கிங்ஸ்பரி என்ற ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். ஈஸ்டர் அன்றைக்கு காலையில் குளித்து முடித்து டிபன் சாப்பிடுவதற்காக மேலே ரூமிலிருந்து கீழே வருவதற்காக முயன்றனர். அந்த நேரத்தில்தான் அதாவது 8.45 மணிக்கு பயங்கர குண்டு வெடிப்பு சத்தம் கேட்டிருக்கிறது.

கட்டிடங்கள் குலுங்கின
அதாவது ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதில் இந்த ஓட்டலும் ஒன்று! இதனால் ஹோட்டல் கட்டிடமே அதிர்ந்ததாம்.. ஒருநிமிடம் என்ன நடக்கிறது என்றே யூகிக்க முடியவில்லை என்று செல்வராஜ் சொல்கிறார். தொடர்ந்து இதை பற்றி செல்வராஜ் சொல்லும்போது:

சுனாமியா?
"ஹோட்டலில் உள்ள நீச்சல் குளம் தண்ணீர் மேலே எழும்பி ஊற்றியதால் சுனாமிதான் வந்துவிட்டது என்றுகூட நினைத்தோம். கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து நாலா புறமும் சிதறி ஓடினார்கள். எங்கே போறதுன்னே தெரியாமலும், அடுத்து என்ன நடக்கும்னும் தெரியாமல் 6 பேரும் பயத்திலேயே உறைந்து போய் இருந்தோம்.

வைரமுத்து
பயந்து நடுங்கி இருந்தபோது ஓட்டல் ஊழியர்கள்தான் எங்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றார்கள். கவிஞர் வைரமுத்து போன் பண்ணி நிலைமையை விசாரித்தார். வேறு ஒருஇடத்தில் எங்களை தங்க வைத்தார்கள். எனக்கு ஜூரமே வந்துவிட்டது.

உசுரே வந்தது
அங்கேயே ஒரு ஆஸ்பத்திரியில் அழைத்து சென்றார்கள். அங்க ஆஸ்பத்திரியிலதான் குண்டு வெடிப்பு பத்தி நர்ஸ்கள் பேசிக்கிட்டாங்க. நேத்து மதியம் கோயமுத்தூர் மண்ணை மிதித்த பிறகுதான் உசுரே வந்தது" என்று செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications