இதுவரை டூர் போனதே இல்லை.. முதல் முறையாக இலங்கை சென்ற திமுக மா.செ.. குண்டுவெடிப்பால் திரும்பிய சோகம்
இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக நிர்வாகி
Recommended Video
சென்னை: "இதுவரைக்கும் நான் டூர் எல்லாம் போனதே இல்லை.. அதனால இலங்கைக்கு போகலாம்" என்று ஆசை ஆசையாக சென்ற திமுக பிரமுகர் ஒருவர் குண்டுவெடிப்பில் இருந்து உயிர்தப்பி வந்திருக்கிறார்!
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ். இவர்தான் இந்த குண்டுவெடிப்பில் இருந்து தப்பியவர். சில தினங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. அதனால் அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் நிர்வாகிகளுடன் செல்வராஜ் செயல்பட்டார்.
தேர்தலும் முடிந்த நிலையில், எங்காவது டூர் போகலாம் என்று ஆசைப்பட்டார் செல்வராஜ். நண்பர்கள், கட்சி நிர்வாகிகளிடம் "இதுவரைக்கும் நான் டூர் போனதே இல்லை.. அதுவும் வெளிநாடு எல்லாம் போனதே கிடையாது. இந்த முறை எங்காவது போகலாம்" என்று சொல்லி இருக்கிறார். அதன்படியே இலங்கை போவதென முடிவெடுத்து கடந்த 20-ம் தேதி 6 பேர் புறப்பட்டிருக்கிறார்கள்.

குண்டுவெடிப்பு
இலங்கையில் கிங்ஸ்பரி என்ற ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். ஈஸ்டர் அன்றைக்கு காலையில் குளித்து முடித்து டிபன் சாப்பிடுவதற்காக மேலே ரூமிலிருந்து கீழே வருவதற்காக முயன்றனர். அந்த நேரத்தில்தான் அதாவது 8.45 மணிக்கு பயங்கர குண்டு வெடிப்பு சத்தம் கேட்டிருக்கிறது.

கட்டிடங்கள் குலுங்கின
அதாவது ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதில் இந்த ஓட்டலும் ஒன்று! இதனால் ஹோட்டல் கட்டிடமே அதிர்ந்ததாம்.. ஒருநிமிடம் என்ன நடக்கிறது என்றே யூகிக்க முடியவில்லை என்று செல்வராஜ் சொல்கிறார். தொடர்ந்து இதை பற்றி செல்வராஜ் சொல்லும்போது:

சுனாமியா?
"ஹோட்டலில் உள்ள நீச்சல் குளம் தண்ணீர் மேலே எழும்பி ஊற்றியதால் சுனாமிதான் வந்துவிட்டது என்றுகூட நினைத்தோம். கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து நாலா புறமும் சிதறி ஓடினார்கள். எங்கே போறதுன்னே தெரியாமலும், அடுத்து என்ன நடக்கும்னும் தெரியாமல் 6 பேரும் பயத்திலேயே உறைந்து போய் இருந்தோம்.

வைரமுத்து
பயந்து நடுங்கி இருந்தபோது ஓட்டல் ஊழியர்கள்தான் எங்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றார்கள். கவிஞர் வைரமுத்து போன் பண்ணி நிலைமையை விசாரித்தார். வேறு ஒருஇடத்தில் எங்களை தங்க வைத்தார்கள். எனக்கு ஜூரமே வந்துவிட்டது.

உசுரே வந்தது
அங்கேயே ஒரு ஆஸ்பத்திரியில் அழைத்து சென்றார்கள். அங்க ஆஸ்பத்திரியிலதான் குண்டு வெடிப்பு பத்தி நர்ஸ்கள் பேசிக்கிட்டாங்க. நேத்து மதியம் கோயமுத்தூர் மண்ணை மிதித்த பிறகுதான் உசுரே வந்தது" என்று செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications