Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹேய் எப்புட்றா".. காட்டுக்குள் கட்டிப்புரண்ட பெண்கள்.. யாரந்த காதலன்.. அதிர்ந்த மக்கள்.. இப்படியுமா

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ஒரு பெண்ணுக்காக, 2 ஆண்கள் அடித்து கொள்ளும் சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால், ஒரு ஆணுக்காக 2 பெண்கள், அடித்து கொண்டுள்ளனர்.. அதுவும் இவர்கள் 2 பேருமே பள்ளி மாணவிகள் என்பது வேதனையை தந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது... இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை உள்ளது.

மொத்தம் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள்.. இந்நிலையில், நேற்று மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில், அந்த பள்ளி மாணவிகள் ஒன்றாக திடீரென திரண்டனர்.

 காட்டுப்பகுதி

காட்டுப்பகுதி

30-க்கும் மேற்பட்ட மாணவிகள், காட்டுப்பகுதியில் ஒன்றாக திரண்டதுடன், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.. ஒருவரை பார்த்து இன்னொருவர் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் திட்டிக் கொண்டார்கள்.. இந்த தடித்த வார்த்தைகள் தகராறாகவும் உருவெடுத்தது.. மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர்... பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. எதற்காக இவர்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்றும் புரியாமல் விழித்தனர்..

 ஆவேசம்

ஆவேசம்

இதனால், அந்த பகுதி மக்கள், விரைந்து வந்து, மோதலை தடுத்து நிறுத்த முயன்றனர்.. ஆனாலும், ஆவேசமாக காணப்பட்ட மாணவிகளை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.. பிறகு, பொதுமக்களே பெரும் முயற்சிக்கு பிறகு அவர்களை அமைதிப்படுத்தினர்.. மாணவிகளிடம் மோதலுக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், இது ஒரு காதல் விவகாரம் என்பதே தெரியவந்தது.. அந்த பள்ளியில் படிக்கும் மாணவி, மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்... ஆனால், அந்த மாணவனுக்கு இன்னொரு மாணவி, வாட்ஸ் அப் மூலம் பல்வேறு மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.. அதே மாணவனுடன் நிறைய நேரம் சாட்டிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

 முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

இந்த விஷயம் மாணவணை காதலிக்கும் அந்த பெண்ணுக்கு தெரிந்துவிட்டது.. அதனால், சகமாணவியிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.. தான் காதலிக்கும் மாணவனுடன் சாட்டிங்கில் எப்படி ஈடுபடலாம்? என்று தட்டிக்கேட்டுள்ளார்... இதுதான் இவர்களுக்குள் தகராறாக உருவெடுக்க காரணமாகி உள்ளது.. இதற்கு முன்புகூட, இது தொடர்பாக பெரிய சண்டை வந்துள்ளது.. அவர்களுக்குள் அடிக்கடி தகராறு வரை சென்றிருக்கிறது.. ஆனாலும், எந்த முடிவும் இந்த காதல் விவகாரத்தில் எட்டப்படவில்லை.. ஒரு மாணவனுக்காக 2 பெண்கள் அடித்துக் கொள்ளும் விவகாரம் இவர்களின் மற்ற தோழிகளுக்கும் தெரியுமாம். அதனால், இந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சக தோழிகளை, இந்த 2 பெண்களும் கேட்டுக் கொண்டனர்.

குடுமிப்பிடி

குடுமிப்பிடி

அதற்காக, நேற்று சாயங்காலம் ஸ்கூல் முடிந்ததுமே, இந்த பிரச்சினை தொடர்பாக பேசி தீர்த்து கொள்வதற்காக 2 மாணவிகளும், தங்களுடன் படிக்கும் தோழிகளை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பு மாணவிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சுமூக முடிவு ஏற்படாமல், 2 தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது... வாக்குவாதம் முற்றிப்போய், இரு தரப்பு மாணவிகளும் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டு கட்டிப்புரண்டுள்ளனர்..

 ஹெச்.எம். ஷாக்

ஹெச்.எம். ஷாக்

அதற்கு பிறகுதான் பொதுமக்கள் உடனே இதனை பார்த்து தடுத்து நிறுத்தியுள்ளனர்... பிறகு, இந்த சம்பவம் ஸ்கூல் வரை கொண்டு செல்லப்பட்டது.. பள்ளி தலைமையாசிரியர் இதை கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்.. இரு தரப்பு மாணவிகளிடமும் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.. காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... காட்டுக்குள் 2 பெண்களும் கட்டிப்புரண்டு, உருண்டு சண்டை போடும் அளவுக்கு சென்றுள்ள நிலையில், அப்படிப்பட்ட காதலன், யார் என்றுதான் தெரியவில்லை..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+