திருப்பூர் வரதட்சணை கொடுமை.. பிரீத்தி தற்கொலை வழக்கில் கணவன், மாமியார், மாமனார் கைது.. போலீசார் அதிரடி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருமணமான 11 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ரிதன்யா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து உயிரை மாய்த்த நிலையில் திருப்பூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வரதட்சணை கொடுமையால் தான் தனது மகள் பிரீத்தி உயிரிழந்ததாக குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கணவர், மாமியாருடன் தகராறு?
திருப்பூர் கே செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் குப்புசாமி. இவரது மனைவி சுகந்தி. இவர்களது 26 வயது மகள் பிரீத்தி. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பிரீத்திக்கும் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயர் சதீஸ்வர் (30) என்பவருக்கும் திருமணம் ஆனது.
இந்த திருமணத்தின் போது வரதட்சணையாக பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை செய்த பிரீத்தி
பெற்றோர் வீட்டுக்கு வந்த பிரீத்தி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்து இருக்கின்றனர்.
இந்த சொத்தில் பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை கணவர் சதீஸ்வர், தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கேட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில், இந்த முடிவை எடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து நல்லூர் போலீசார் விரைந்து சென்று பிரீத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர், மாமனார், மாமியார் கைது
இதற்கிடையே என் மகள் சாவுக்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என்று கூறி பிரீத்தியின் குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டி புகார் அளித்தனர். மேலும் சத்தீஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் பிரீத்தியின் உடலை வாங்குவோம் எனவும் உறவினர்கள், குடும்பத்தினர் போராட்டம் செய்தனர்.
இதையடுத்து நல்லூர் போலீசார் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications