கொடுமை.. 4 மணி நேரமாக ரோட்டில் கிடந்த முதியவர் சடலம்.. திருப்பூரில் பரபரப்பு!
நிர்வாணமாக விழுந்து கிடந்தது முதியவரின் சடலம்
திருப்பூர்: வாயில் நுரை தள்ளியபடியே.. 4 நேரமாக ஒரு முதியவரின் சடலம் திருப்பூர் ரோட்டில் விழுந்து கிடந்தது அதிர்ச்சியை தந்து வருகிறது.
கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது.. யார் அருகில் சென்றாலும் தொற்று வந்துவிடுமோ என்ற பீதியும் அளவுக்கு அதிகமாகவே உள்ளது... இதனாலேயே ஒருவருக்கு செய்யும் அடிப்படை உதவிகூட இல்லாமல் போய் வருகிறது.
அந்த வகையில் திருப்பூரில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி வாசலில் ஒரு முதியவரின் சடலம் கிடந்தது.. ஆஸ்பத்திரி வாசலிலேயே விழுந்து கிடந்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
கிட்டத்தட்ட 4 மணி நேரமாக அந்த தாத்தாவின் வாயில் நுரை பொங்கி கிடந்தது.. இதை பார்த்து பொதுமக்கள் தகவல் சொல்லி உள்ளனர்.. ஆனால், ஆஸ்பத்திரி அங்கேயே இருந்தும் யாரும் ஊழியர்கள் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதன்பிறகுதான் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.. இந்த தாத்தா யார் என்று தெரியவில்லை. இதை பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. அதேபோல, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு முதியவரின் நிர்வாண சடலம் கிடந்தது.. பொதுமக்கள் தகவல் சொல்லி, 5 மணி நேரம் கழித்தே அதை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து சென்றனர்.
தமிழ்நாட்டில் இன்று உச்சம் தொட்ட கொரோனா 3509 பேர் பாதிப்பு - 2236 பேர் மீண்டனர் - 45 பேர் மரணம்