உடுமலை கோழிப்பண்ணை அலுவலகத்தில்.. வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சுகுணா புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் உடுமலை நேரு வீதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில், வருமான வரித்துறை கமிஷனர் பெர்னாண்டோ தலைமையில் மூன்று கார்களில் வந்த 10 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிறுவனம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோழி பண்ணைகள் மற்றும் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டு
வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications