தமிழகம் வந்த மோடி.. பிரதமர் தொடங்கி வைத்த திட்டங்கள் இவைதான்!
தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, திருப்பூரில் 5 முக்கிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
திருப்பூர்: தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, 5 முக்கிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி, தற்போது தமிழகம் வருகை புரிந்துள்ளது. திருப்பூரில் அவர் இன்று பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார். இதற்காக பெரிய விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

விழா மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வணக்கம் கூறி பிரதமரை வரவேற்றார். மத்திய அமைச்சர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் மேடையில் இருந்தனர்.
இதில் பின்வரும் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்,
1.திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி. மருத்துவமனை மூலம் 1.22 லட்சம் ஊழியர்கள், பணியாளர்கள் பலன் பெறுவார்கள். 100 படுக்கை வசதிகளை கொண்டது இந்த மருத்துவமனை.
2.அதேபோல் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இரண்டு விமான நிலையங்களும் உலகத்தரத்துடன் அதிநவீனமாக மாற்றப்படும் என்கிறார்கள்.
3.சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐசி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2.5 லட்சம் பணியாளர்கள், ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
4. மேலும் எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷின் துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
5. சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ சேவையை மோடி தொடங்கி வைத்தார். . 10 கிமீ தூரத்திற்கு இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது.கைது கூவம் நதிக்கும் கீழேயும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications