நீங்க கருப்பு கொடின்னா.. நாங்க காவி கொடி.. என்ன இப்படி கிளம்பிட்டாங்க!
திருப்பூர் வரும் பிரதமரை காவி கொடியுடன் வரவேற்போம் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
திருப்பூர்: நீங்க கருப்பு கொடி காட்டி எதிர்த்தால், நாங்க காவி கொடி காட்டி பிரதமரை வரவேற்போம் என்று இந்து முன்னணி மதிமுகவுக்கு போட்டியாக அறிவித்துள்ளது.
இன்று திருப்பூருக்கு பிரதமர் மோடி வர உள்ளார். தமிழகத்திற்கு தொடர்ந்து பிரதமர் துரோகம் இழைத்து வருவதால் அவருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்.
பிரதமர் எப்போது தமிழகம் வந்தாலும் கருப்பு கொடி காட்டுவோம் என்றும், அது தன்னுடைய கடமை என்றும் ஏற்கனவே அறித்திருந்தார், அறிவித்தபடியே நடத்தியும் காட்டினார், இப்போதும் அறிவித்துள்ளார். திருப்பூர் பஸ் ஸ்டேண்டில் மதியம் இந்த எதிர்ப்பு போராட்டம் நடக்க உள்ளது.

கருப்புக்கொடி
அதேபோல, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை
இதில் 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்த போகின்றன. ஆனால் இவர்கள் இரண்டு தரப்புக்கும் போராட்டம் நடத்த போலீசார் எந்த அனுமதியும் தரவில்லை. தடையை மீறித்தான் போராட்டம் செய்யவிருக்கிறார்கள்.

காவிக்கொடி
வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தவுள்ள அதே இடத்தில், நாங்கள் காவி கொடி காட்டுவோம் என்றும், கருப்பு கொடி எதிர்த்தால், மோடியை காவி கொடி காட்டி வரவேற்போம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

போலீசார் குவிப்பு
இப்படி காவி கொடியும், கருப்பு கொடியும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்க உள்ளதால் நேத்து ராத்திரி முதலே திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் பிரதமர் வந்து திரும்பி செல்லும்வரை திருப்பூர் வருகை பதற்றமாக மாறியுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications