125 ஆடுகள் விற்றால் ரஃபேல் வாட்ச் வாங்கலாம்.. அண்ணாமலைக்கு குட் ஷெபர்டு பட்டம்..சிவசேனாதிபதி கிண்டல்
திருப்பூர்: தமிழ்நாட்டில் 125 ஆடுகள் விற்றால் தான் ரூ.5 லட்சத்திற்கான ரஃபேல் வாட்ச் வாங்க முடியும் என்றும், அண்ணாமலை வாங்கிய ரகசியத்தை தங்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று திமுக நிர்வாகி கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆடு மேய்ப்பர் என்ற பட்டத்தையும் கார்த்திகேய சிவசேனாதிபதி அண்ணாமலைக்கு கொடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம் அரசியலில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரஃபேல் வாட்சிற்கான ரசீதை வெளியிட முடியுமா என்று சவால் விட்டும், இதுவரை ரசீது வெளியிடப்படவில்லை.
ஏப்ரல் மாதத்தில் ரஃபேல் வாட்ச்சிற்கான பில் வெளியிடப்படும், டீ கடையில் பேசும் போது ரசீது வெளியிடப்படும் என்று அண்ணாமலை பதிலளித்து வருகிறார். இருப்பினும் திமுகவினர் ரஃபேல் வாட்ச் விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கார்த்திகேய சிவசேனாதிபதி
இந்த நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜோசியரை பார்ப்பாரோ?
புலம்பெயர் தமிழர் நல வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு காங்கேயம் வந்த கார்த்திகேய சிவசேனாபதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜோசியரை பார்த்துவிட்டு ரஃபேல் வாட்ச்சிற்கான பில் கொடுப்பார் என்று நினைக்கிறேன். இதற்கென்ன நேரம், காலமா பார்ப்பார்கள்? பில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே.

125 ஆடுகள்
தேசபக்தி என்பது ஒரு ஐயோக்கியனின் கடைசி புகலிடம் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். அண்ணாமலை கட்டி உள்ள வாட்ச் விலை ரூ.5.12 லட்சம் என்று கூறுகிறார்கள். அண்ணாமலை 125 ஆடுகள் விற்றால் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு வாட்ச் வாங்க முடியும். நமது ஊரில் எவ்வளவு பிரமாதமாக இவர் ஆடு மேய்த்து இருந்தால் அந்த வாட்ச் வாங்க முடியும்?

ரகசியம் என்ன?
அந்த ரகசியத்தை அண்ணாமலை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தால், நாங்கள் வாட்ச் வாங்காவிட்டாலும், எங்களது புள்ளை குட்டிகளை நன்றாக படிக்க வைத்து பார்த்துக் கொள்வோம். சிறப்பாக ஆடு வளர்த்த அண்ணாமலைக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறந்த ஆடு மேய்ப்பர் என்ற பட்டத்தை வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications