Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்மரில் இதுதான் பெரிய ட்விஸ்ட்.. கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி.. நடந்த மேஜிக்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழகத்தில் வெயில் அதிகரித்த போதிலும். சிக்கன் வாங்குவது தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. வழக்கத்தைவிட நுகர்வு அதிகரிப்பதால் கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. பல்லடம் பகுதி கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் என தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

This is the big twist in Summer Broiler producers are doubly happy How did this magic happen

தமிழ்நாட்டில் கறிக்கோழி பண்ணைகள் பரவலாக எல்லா பக்கமும் இருக்கிறது என்றாலும் கொங்கு மண்டலத்தில் தான் கறிகோழி உற்பத்தி மிக அதிகமாக நடக்கிறது. பல்லடமும், நாமக்கல்லும் தான் விலையை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன.

சுமார் 25 ஆயிரம் பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டை தாண்டி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தமிழகத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை என்பது பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுவது . இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும். தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.95 வரை செலவாகும் நிலையில், கடந்த 6-ந் தேதி நிலவரப்படி ரூ.136 ஆக இருந்தது.

இந்தநிலையில் வருகிற 19-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற போகிறது.. இத்தேர்தலில் வெற்றி பெற தி.மு.க., அ.தி.மு.க., பாஜக, நாதக போன்ற கட்சிகள் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது வாக்கு சேகரிக்க கூட வரும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தினமும் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 போன்ற வகை உணவுகளை வழங்குவது அதிகமாக உள்ளது.

இது ஒருபுறம் எனில் சிக்கன் நுகர்வும் தமிழகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அதன்படி கடந்த 24-ந் தேதி ரூ.111 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை(உயிருடன்) 27-ந் தேதி ரூ.120, 2-ந் தேதி ரூ.130, 4-ந் தேதி ரூ.134, 6-ந் தேதி ரூ.136 என உயர்ந்துள்ளது.
2 வாரத்தில் கிலோவிற்கு ரூ.25 அதிகரித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

தேர்தல் காரணமாக கறிக்கோழி நுகர்வு, அதிகரித்து தினமும் வழக்கத்தை விட சுமார் 3 லட்சத்திற்கு மேல் ஆர்டர் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு கிலோ கோழிக்கறி சென்னையில் 300 ரூபாய் என்கிற அளவில் விற்பனையாகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+