திருப்பூர்-அவினாசி சாலை.. மாநகர போலீஸ் எடுத்த அதிரடி முடிவு.. திருப்பூர் வடக்கு எம்எல்ஏ எதிர்ப்பு
திருப்பூர்-அவினாசி சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றினால் அவினாசி சாலையில் அமைந்துள்ள எம்.எல்.ஏ.அலுவலகத்திற்கு வரும் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் அவினாசி சாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலக சந்திப்பில் இருந்து புஷ்பா மேம்பாலம் வரையிலும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பனியன், தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
திருப்பூர் மாநகரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய நகரமாக திருப்பூர் உருவெடுத்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் மதுரையை முந்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் வெளியூர் மக்கள் தொகையை கணக்கிட்டால், மதுரையை விடவும் மக்கள் தொகை திருப்பூரில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் பிழைப்பு தேடி திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் திருப்பூர் மாநகரம் நகரின் எல்லா பக்கமும் வளர்ந்துவிட்டது. பெருமாநல்லூர், பல்லடம், அவினாசி, நல்லூர், கோவில்வழி, ஊத்துக்குளி, மங்கலம் நகருக்குள் நுழையும் அந்த திசையிலும் ஊர் வளர்ந்து பெருத்துவிட்டது. குறிப்பாக அவினாசி சாலையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கணக்கிட்டால், 16 கிமீ தூரத்திற்கு நகரம் விரிவடைந்துள்ளது. இதையடுத்து அந்த சாலையை ஒருவழிப்பாதையாக்கலாமா என்று போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை, திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறுகையில், "திருப்பூர்-அவினாசி சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றினால் அவினாசி சாலையில் அமைந்துள்ள எம்.எல்.ஏ.அலுவலகத்திற்கு வரும் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் அவினாசி சாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலக சந்திப்பில் இருந்து புஷ்பா மேம்பாலம் வரையிலும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பனியன், தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கும். மேலும் பெருமாநல்லூர் சாலையில் ஏற்கனவே அதிக வாகன போக்குவரத்து காரணமாக, பல சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
பெருமாநல்லூர் சாலையில் இருந்து ராம்நகர் சாலை வழியாக குமார் நகரை அடைய வாகனங்கள் செல்லும்போது அங்கு ஏற்கனவே சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளால் கூடுதல் போக்குவரத்து நெரிசல்தான் ஏற்படும். எனவே அவினாசி சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்வதை கைவிட வேண்டும். தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications