முககவசம் அணியாத நபரிடம் ஜாதியை கேட்ட திருப்பூர் போலீஸ்- வைரலாகும் வீடியோ
திருப்பூர்: திருப்பூரில் முக கவசம் அணியாத பொதுமக்களிடம் என்ன ஜாதி என போலீஸ்காரரர் ஒருவர் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
உலக நாடுகளை கடந்த 8 மாதங்களாக உலுக்கி எடுத்து வருகிறது கொரோனா தொற்று நோய். உலக நாடுகளில் இதுவரை மொத்தம் 10,66,984 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா மரணங்கள்
இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 39,430 பேரும் 2-வதாக தமிழகத்தில் 10,052 பேரும் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.

அரசு பிரசாரங்கள்
கொரோனாவுக்கு மருந்து இன்னமும் கண்டுபிடிக்காத சூழ்நிலையில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகள்தான் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் உள்ளிட்டவை குறித்து அரசு தரப்பில் தீவிர பிரசாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.

திருப்பூரில் ஜாதி கேட்ட போலீஸ்
பல இடங்களில் முக கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. திருப்பூரில் இதேபோல் முக கவசம் அணியாமல் சென்ற தம்பதியை போலீஸ் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை என்ற பெயரில் ஊர், பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்ட போலீசார், ஜாதி என்ன என்றும் கேட்டிருக்கின்றனர்.

அங்க அடையாளம்
இதனால் கொதித்து போன அந்த தம்பதியினர், அது எப்படி ஜாதியை கேட்கலாம்? பொது இடத்தில் என்ன ஜாதி என கேட்க ரூல்ஸ் இருக்கிறதா? என ஆவேசம் காட்டினர். அப்போது, அங்க அடையாளத்தை சொல்லுங்க என போலீஸ் மீண்டும் கேட்க நான் என்ன அக்யூஸ்டா என ஆவேசப்பட்டார் அந்த நபர். இதனை அப்படியே வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுவிட்டனர்.

போலீஸ் மீது நடவடிக்கை
திருப்பூர் போலீசாருடனான இந்த வாக்குவாத வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரியார் சிலைக்கு மாலை போட்ட ஒரே காரணத்துக்காக 3 போலீசாரை இடம் மாற்றம் செய்தவர்கள், இதுபோல் ஜாதியை கேட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? என்கிற கேள்வியையும் முன்வைத்தனர். இதனையடுத்த அந்த போலீஸ்காரர் இப்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளாராம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications