ஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்!
பஸ் சக்கரம் இளைஞர் தலை மீது ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்
Recommended Video
திருப்பூர்: ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்ஸை, டிரைவர் சடாரென்று திடீரென்று திருப்பியதால், பைக்கில் சென்ற அருண்குமார் தவறி விழுந்து, அதே பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது சம்பந்தமான பதைபதைக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், முத்துச்செட்டிபாளையத்தை சேர்ந்த இளைஞர் அருண்குமார். இவர் கடந்த 30ஆம் தேதி அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது ஸ்டாண்டை நோக்கி தனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் வலது புறமாக ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை, திடீரென அந்த பஸ் இடது புறமாக திரும்பியுள்ளது.
அப்போது அருண்குமார் சென்றுக் கொண்டிருந்த பைக் மீது இந்த அரசு பஸ் வேகமாக உரசியது. இதில் நிலைதடுமாறி அருண்குமார் பைக்குடன் சரிந்து கீழே விழுந்துவிட்டார். அந்த நேரம், அருண்குமாரின் மீது அந்த பஸ்ஸின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அருண்குமார் ஹெல்மட் போடாமல்தான் வண்டி ஓட்டி வந்துள்ளார்.

அதனால் தலை மிக மோசமாக நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வளவு கோரமான விபத்தை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் பன்னீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications