Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாட்டில் அண்ணன்.. அண்ணியை லாட்ஜ் கூட்டிப்போன கொழுந்தன்.. கடைசியில் நடந்த கொடுமை.. ஏற்காடு ஷாக்

இளம்பெண் ஓட்டல் ரூமில் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: லாட்ஜில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்காடு போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்.. 30 வயதாகிறது.. இவர் மஞ்சு என்பவருடன் ஏற்காடுக்கு சுற்றுலா வந்துள்ளார்.. மஞ்சுவுக்கு 26 வயதாகிறது.. விஜய்யின் அண்ணிதான் மஞ்சு..!

இருவரும் ஏற்காட்டில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.. இந்நிலையில், நேற்றிரவு இருவரும் தண்ணி அடித்துவிட்டு ரூமுக்கு வந்துள்ளனர்..

 மஞ்சு

மஞ்சு

அப்போது, மஞ்சுவிடம் தனக்கு வரும் 23-ம் தேதி கல்யாணம் நடக்கப் போவதாகவும், கல்யாணத்திற்கு பிறகு இதுபோன்ற நட்பை தொடர முடியாது என்றும் விஜய் கூறியதாக தெரிகிறது.. இது இவர்களுக்குள் வாக்குவாதமாக வெடித்துள்ளது... பிறகு போதையிலேயே 2 பேரும் தூங்கிவிட்டனர். பிறகு விடிகாலை 3 மணிக்கு விஜய்க்கு போதை தெளிந்து கண்விழித்து பார்த்தார்.. ஆனால் அங்கு மஞ்சுவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த விஜய் மஞ்சுவை தேட ஆரம்பித்தார்..

 தண்ணீர்

தண்ணீர்

அப்போது பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது.. அதனால் மஞ்சு பாத்ரூமில் இருக்கிறார் என்று நினைத்து மறுபடியும் போய் படுத்து கொண்டார்.. ஆனால் நீண்ட நேரமாகியும் மஞ்சு வெளியே வரவே இல்லை.. அதனால் பாத்ரூம் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.. அங்கே மஞ்சு நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.. இதனால் அலறிய விஜய், மஞ்சுவை தூக்கிவந்து படுக்கையில் படுக்க வைத்து, துணிகளை போட்டுவிட்டுள்ளார்.. பிறகு, முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்துள்ளார்..

அண்ணி

அண்ணி

ஆனால் மஞ்சுவிடம் அசைவே இல்லை.. எனவே,ஏற்காடு போலீசுக்கு விஜய் தகவல் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் இவர்களின் குடும்ப பின்னணியும் வெளிவந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் - பிரபு.. இருவரும் அண்ணன் தம்பிகள்.. பிரபுவுக்கு திருமணமானது. இவர் மனைவிதான் மஞ்சு.. எல்லாரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருந்துள்ளனர்...

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம்

பிரபு - மஞ்சு தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.. இதில் அண்ணன் பிரபு, குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2017ம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.. அப்போதுதான் வீட்டிலிருந்த அண்ணி மஞ்சு மீது, விஜய்க்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.. கள்ளகாதலாக மாறியது. அடிக்கடி வெளியூருக்கும் இவர்கள் வந்து போயுள்ளனர்.. இதனிடையே கொரோனா காரணமாக வெளிநாட்டிலிருந்து பிரபு சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் என்ற பகுதியில் தனிக்குடித்தனம் சென்று தற்போது விவசாயமும் செய்து வருகிறார்.

 கொலையா?

கொலையா?

இப்படிப்பட்ட சூழலில்தான், விஜய் மஞ்சுவை கூட்டிக் கொண்டு டூர் வந்துள்ளார்.. அப்போதுதான் தன்னடைய கல்யாண பேச்சை எடுத்துள்ளார் விஜய்.. இதில் ஆத்திரம் அடைந்து மஞ்சு அந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.. உண்மையிலேயே இதன் காரணமாக மஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை துரிதமாகி உள்ளது.. விஜய் இப்போது போலீசாரின் பிடியில் உள்ளார்.. கொடைக்கானலில் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+