திருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி வைப்பு
திருச்சி: திருச்சி மத்திய சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 14 பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாமில் தமிழகத்தின் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 54 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த 14 பேரும் அடங்குவர். இவர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் முறைகேடாக தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஜூன் மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வங்க தேசத்தினர் 14 பேர் சொந்த நாட்டுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்படி முகாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 பேர் வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் ஹவுரா விரைவு ரயிலில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டர். பின்னர் அங்கிருந்து வங்கதேச எல்லையில் அந்த நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி திருச்சி மத்திய சிறை கைதிகள் 57 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications