திருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி வைப்பு
திருச்சி: திருச்சி மத்திய சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 14 பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாமில் தமிழகத்தின் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 54 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த 14 பேரும் அடங்குவர். இவர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் முறைகேடாக தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஜூன் மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வங்க தேசத்தினர் 14 பேர் சொந்த நாட்டுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்படி முகாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 பேர் வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் ஹவுரா விரைவு ரயிலில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டர். பின்னர் அங்கிருந்து வங்கதேச எல்லையில் அந்த நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி திருச்சி மத்திய சிறை கைதிகள் 57 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications