Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் ஷாக்! மதுபானம் குடித்து அடுத்தடுத்து இறந்த 2 பேர்! திருச்சியில் என்ன நடந்தது? தீவிர விசாரணை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே மதுபானம் குடித்த நிலையில் அடுத்தடுத்து 2 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அவர்களின் இறப்புக்கு மதுபானம் தான் காரணமா? இல்லை வேறு காரணம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தனர். விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டில் 8 பேர் என மொத்தம் 22 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

2 person died after drink liquor near by Trichy

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தான் மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியில் வசித்த பழனி குருநாதன், பூராசாமி ஆகியோர் மதுபானம் குடித்து பலியாகினர். இதுபற்றிய நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் குடித்த மதுபானத்தில் சயனைடு கலந்து இருப்பது தெரியவந்தது.

இந்த 2 அதிர்ச்சி சம்பவங்களை தொடர்ந்து தற்போது இன்னொரு 2 பேர் இறந்துள்ளனர். இவர்களும் மதுபானம் குடித்த நிலையில் தான் பலியாகி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சியை சேர்ந்தவர் முனியாண்டி (55). அதேபகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவக்குமார் (48).

இவர்கள் 2 பேரும் நேற்று வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்ட்டது. இதையடுத்து இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் இன்று காலை சிகிச்சை பலனின்றி சிவகுமார் பலியானார். இதையடுத்து முனியாண்டி மேல் சிகிச்சைக்காக மற்றொருவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிரும் வாகனத்திலேயே பிரிந்தது.

இந்நிலையில் தான் இவர்களின் மரணத்துக்கு காரணம் மதுபானம் என கூறப்படுகிறது. அதாவது நேற்று முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து மதுபானம் குடித்துள்ளார். அதன்பிறகு தான் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது இருவரும் இறந்துள்ளதாகவும் அந்த பகுதியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இருப்பினும் இவர்கள் 2 பேரின் சாவுக்கான சரியான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே மதுபானம் குடித்து 2 பேர் பலியானதாக அந்த பகுதிகளில் வேகமாக செய்தி பரவி வருகிறது. இதனால் குடிமகன்கள் கலக்கமடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+