திருச்சி சமயபுரம் அருகே ஓடும் காரில்... தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!
திருச்சி: திருச்சி சமயபுரம் அருகே ஓடும் காரில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது காருக்குள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலிருந்து காரில் பாஸ்கா், லாா்வின் உள்ளிட்ட 5 போ் திருச்சி வழியாக சென்று கொண்டிருந்தனா். சமயபுரம் அருகே இருங்களூா் பகுதியைக் கடக்க முயன்றபோது சாலைத் தடுப்புச் சுவரில் காா் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் காயமடைந்து இருங்களூா் பகுதி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதனால் உயிர்சேதம் ஏதும் இல்லை. காரில் ஏற்பட்ட தீ மள, மள வென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த சமயபுரம் தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.












Click it and Unblock the Notifications