Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சென்ற உணவு! மோடி வருகைக்காக உழைத்தவர்களுக்கு நேர்ந்த அவலம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் மேற்கொள்கிறார். இதற்காக திருச்சி நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான உணவு, குப்பை வண்டியில் கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

வரும் 22ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, விரதம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த அவர், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். எனவே திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. திருச்சி விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Controversy because food was brought in a garbage truck to the sanitation workers who were engaged in sanitation work in Trichy

பிரதமரின் பயண திட்டத்தின்படி காலை 11 மணியளவில் காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். எனவே திருச்சி நகர் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இரவு பகல் பாராமல் நூற்றுக்கணக்கில் தூய்மை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

Controversy because food was brought in a garbage truck to the sanitation workers who were engaged in sanitation work in Trichy

ஆனால் இவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவு, குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு வரப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தூய்மை பணியாளர்களுக்கான உணவு அருகில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று இவ்வாறு விநியோகிக்கப்பட இருந்த உணவானது, குப்பை வண்டியில் குப்பைகளுக்கு நடுவில் வைத்து கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றன.

Controversy because food was brought in a garbage truck to the sanitation workers who were engaged in sanitation work in Trichy

உணவு மூடப்படாமல் திறந்தே இருந்திருக்கிறது. இதற்கு பக்கத்தில் குப்பைகள் இருந்திருக்கின்றன. இதனால் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலன் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, இதற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூய்மையான நகரங்களின் பட்டியலில் திருச்சி முதன்மையாக இருக்கிறது. இதற்கு காரணமாக உள்ள தூய்மை பணியாளர்களை நடத்தும் விதம் இதுதானா? என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+