"டாக்டர்" எடப்பாடி பழனிச்சாமி எனும் நான்.. அடுத்து காவிரிக் கரையில் புதுப் பட்டம் தரப் போறாங்களாம்!
திருச்சி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக விவசாயிகளும் புதிய பட்டம் வழங்கவுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பட்டத்தை விவாசய சங்கத்தினர் சூடவுள்ளனர்.
வரும் மார்ச் 7-ம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் நடைபெறும் பாராட்டு விழாவில் புதிய பட்டத்தை வழங்கி கவுரவிப்போம் என கூறுகிறார் மன்னை ரெங்கநாதன்.

கவுரவிப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி தேடி வந்தது போல் பட்டங்களும் தேடி வரத்தொடங்கியுள்ளன. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் நடத்தும் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு டெல்டா விவசாயிகள் சார்பில் புதிய பட்டம் சூட்டி கவுரவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் உள்ள இ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஜெ.வுக்கு பாராட்டு
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்ததற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் 2013ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி தஞ்சையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதாவுக்கு ''பொன்னியின் செல்வி'' என்ற பட்டத்தை சூட்டி விவசாயிகள் சங்கத்தினர் சிறப்பித்தனர். இப்போதும் அதே பாணியில், ஜெயலலிதாவை கவுரவித்ததை போலவே எடப்பாடி பழனிசாமியையும் கவுரவிக்க உள்ளனர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர்.

தகவல்
இது தொடர்பாக திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் மன்னை ரெங்கநாதன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சிறந்த செயல்வீரராக இருக்கிறார் என புகழாரம் சூடினார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வரும் மார்ச் 7-ம் தேதி திருவாரூரில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக கூறினார். அப்போது அவருக்கு சிறப்பு பட்டம் கொடுப்பது பற்றி விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

ரகசியம்
வேளாண் மண்டலம் தொடர்பாக அறிவிப்பை இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல்வர் எடுத்துவிட்டதாகவும், அதனை ரகசியமாக வைத்து நிறைவேற்றியிருக்கிறார் எனவும் மன்னார்குடி ரெங்கநாதன் தெரிவித்தார்.காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் கொண்டு வந்ததை அரசியல் ஆக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்த மண்டலத்தில் கரூர், மாயனூர், அரியலூரின் ஒரு பகுதி, கடலூர், மாவட்டத்தின் சில பகுதிகளும் விரைவில் இணையும் என தெரிவதாக கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications