கஜா: புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கிய ஊழியர்.. அமைச்சர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் பலி
திருச்சி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்பை சரி செய்த போது மின்சாரம் தாக்கிய ஊழியரை அமைச்சர் காப்பாற்றி திருச்சி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார்.
கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பலமாக காற்று வீசியது. இதனால் மின் கம்பங்கள் சாய்ந்தன. இந்த மாவட்டத்தில் புயல் மீட்பு பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
அப்போது புதுக்கோட்டை நகரின், கீரனூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நின்று சில மின்சாரத்துறை ஊழியர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.

மயக்கம்
அப்போது எதிர்பாராதவிதமாக மின் ஊழியர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் தேவனாங்குறிச்சியை சேர்ந்த மோகன் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து டிரான்ஸ்பார்மர் மீது அப்படியே மயங்கி சாய்ந்தனர்.

திருச்சி மருத்துவமனை
சக ஊழியர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவர்கள் கீழே இறக்கப்பட்ட போது முகத்தை தட்டி கொடுத்தும் துணியால் முகத்தை துடைத்தும் விட்டு பணிவிடை செய்தார். இதையடுத்து தனது காரிலேயே அவர்களை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அஞ்சலி
பின்னர் மருத்துவமனையிலும் சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு எம்எல்ஏ பொன் சரஸ்வதி அஞ்சலி செலுத்தினார்.
|
தியாகம்
ஊழியர் பலி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகளின் போது மின்சாரம் தாக்கி திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மின் ஊழியர் முருகேசன் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது தியாகம் போற்றத்தக்கது! என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications