அமைச்சர் கே என் நேரு வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?
திருச்சி: அதிகாலை முதல், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருந்தனர். இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் நேருவின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. 10 மணி நேரமாக நடந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் வீட்டில் ரெய்டை மேற்கொண்டனர். வங்கி மோசடி வழக்கு ஒன்றில் விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதில் இன்று காலை முதல் ரெய்டை மேற்கொண்டு வருகிறது.

காலை முதல் நேருவின் சகோதர, சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் ரெய்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்ததாக திருச்சியில் உள்ள கே என் நேருவின் வீட்டிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. காலையில் இருந்து 10 மணி நேரமாக நடந்து வந்த சோதனை மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே என் நேருவின் வீட்டில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டில் இருந்து கிளம்பும் போது அதிகாரிகள் கையில் ஒரு பெட்டியை வைத்திருந்தனர். கேஎன் நேரு வீட்டில் சோதனை நிறைவடைந்த நிலையில் அவரது உறவினர்கள், சகோதர சகோதரிகள் வீடுகளில் சோதனை இன்னும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications