யாராவது என்ன செருப்பால அடிச்சிட்டு போங்க.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு.. திருச்சியில் போராட்டம்
திருச்சி: எங்கள் போராட்டத்தில் தவறு இருந்தால் செருப்பால் அடியுங்கள் என்று செருப்பை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நூதன போராட்டம் நடத்தியுள்ளார்.
Recommended Video
அய்யாக்கண்ணு தலைமையில் 30க்கு மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் திருச்சி - கரூர் பைபாஸ், அண்ணாமலை நகர், மலர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் முன்பு 37வது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று அவர் பேசுகையில், கூறியதாவது:

போராட உரிமை
ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சிகாரர்கள் கொடுத்த வாக்குறுதியை செய்யுங்கள் என்று கேட்பதற்கு அரசியல் அமைப்பு சட்டம் விவசாயிகளுக்கு உரிமை வழங்கியுள்ளது. அதன்படி மோடி அறிவித்த இரண்டு மடங்கு லாபம் தரும் விலையை கொடுங்கள் என்று கேட்பதற்கும், லாபகரமான விலையை தராத மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், கோதாவரி-காவிரி இணைப்பை நிறைவேற்ற வேண்டும் என்று போராடுவதற்கும் விவசாயிகளுக்கு உரிமை இருப்பதனால் தான் நாங்கள் போராடி வருகிறோம். எங்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராடுகிறது.

செருப்பை வைத்து அடிக்கட்டும்
இதற்காக, போராடுவதற்கு உரிமையில்லை என்று எந்த அரசியல் கட்சியும் நிரூபித்தால் நாங்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் கழட்டி வைக்கும் செருப்பை கொண்டு எங்களை அடிக்கலாம். ஜனநாயக நாட்டில் விவசாயிகளை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று கூறி, செருப்பை கழட்டி வைத்து சவால் விடும் நூதன போராட்டம் நடத்தினார், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு.

நெல் பாதிப்பு
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, தற்போது ஏற்பட்ட மழையினால் அனைத்து நெல்லும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இது எதற்கும் பயன்படாது. அதிகபட்சமான நிவாரண தொகை வழங்க வேண்டும்.

இரு மடங்கு விலை
விவசாயிகளுக்கு மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி எதையும் செய்வதில்லை, மீனவர்களுக்கு தரும் நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. மத்திய மோடி அரசு இருமடங்கு விலை தருவதாக கூறி இதுவரை தரவில்லை. எனவே, மாநில அரசு விவசாயிகளுக்கு உரிய உதவிகள் செய்ய வேண்டும். நாங்கள் போராட்டத்தில் கூறும் கருத்துகளுக்கு எதிராக இருந்தால் எங்களை செருப்பால் அடிக்கலாம் என கூறி இருந்தோம். ஆனால் இதுவரை ஒருவரும் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லியில் போராட்டம்
2017ம் ஆண்டு டெல்லியில் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 141 நாட்கள் அய்யாகண்ணு தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது அரை நிர்வாண போராட்டம், மண்டை ஓடு அணிந்து போராட்டம் என பல வகை போராட்டங்களை செய்து, தேசிய அளவில் அய்யாக்கண்ணு கவனம் ஈர்த்தவராகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications