வாவ்.. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு பறந்து சென்ற காவிரி கொள்ளிடம் ஆற்றின் புனித மணல்!
திருச்சி: அயோத்தியில் 5-ஆம் தேதி ராமர்கோவில் கட்டுமான பணிக்கான பூமிபூஜைக்காக ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம், காவிரி கொள்ளிடம் புனித மணல் அனுப்பிவைக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான பூமிபூஜை வருகிற 5-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு புண்ணிய தலங்களிலிருந்து பொருட்கள் அயோத்திக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

கடந்த 3 நாட்களுக்கு முன் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து புனித மணலும், மறுநாள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்திலிருந்து புனித மணலும் அயோத்திக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.
அதுபோல் ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது, தெய்வீகமானது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்ரீராமரின் குலதெய்வம் ஆவார். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் பிரசாதத்தை அயோத்திக்கு கொண்டு செல்வதற்காக கோவில் அர்ச்சகர் சுந்தர்பட்டர், தீபக் பட்டர் ஆகியோர் விசுவ இந்து பரிஷத் அமைப்பினரிடம் வழங்கினர்.
அத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பெருமாள் பிரசாதங்களும், காவிரி அம்மா மண்டபம் மற்றும் கொள்ளிடம் படித்துறைகளில் சேகரிக்கப்பட்ட புனித மணலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கா கோபுரம் பகுதியிலிருந்து நேற்று காலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு, கேரளா அமைப்பு செயலாளர் நாகராஜன், மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், கோட்ட பொறுப்பாளர்கள் செல்லதுரை, ஜம்பு, பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பாரத், பிராமணர் சங்க மாவட்ட தலைவர் சங்கர், பா.ஜனதா பாலாஜி, கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசுவ இந்து பரிஷத் ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் கோபாலன், மாவட்ட செயலாளர் சசிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications